புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2018

கருணாநிதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக மனோ மற்றும் கரு தமிழகம் பயணம்


தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதுபெரும் அரசியல்வாதியுமான மறைந்த மு.கருணாநிதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக, இலங்கைப் பிரதமர் சார்பில் அமைச்சர் மனோ கணேசனும் சபாநாயகர் சார்பில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதனும், இன்று (08) காலை, சென்னை நோக்கிப் பயணித்துள்ளனர்.

இவர்களுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களாக வடிவேல் சுரேஷ் மற்றும் எம்.திலகர் ஆகியோரும் பயணித்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad