உயிரிழந்த நபர் தேங்காய் பறிக்கும் தொழிலை மேற்கொண்டு வருபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்றைய தினம் முழங்காவில் பகுதியில் உள்ள ஒருவரின் காணியில் தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய சமயம் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அன்புபுரம் முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ரூபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். |