புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2023

கிளிநொச்சியில் கசிப்பு வேட்டைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு! [Friday 2023-09-15 17:00]

www.pungudutivuswiss.com


கிளிநொச்சியில்  நேற்று காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மலையாளபுரம் புதுஜயன்கன்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வரும் நபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸார் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் சென்றுள்ளனர்.

இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர்கள் பொலிஸாரை கண்டு குளத்திற்குள் குதித்து தப்பியோடிய போது அவர்களை பொலிஸார் தனித்தனியாக ஒ துரத்திச் சென்றுள்ளனர்.

இறுதியில் இரு பொலிஸார் திரும்பிய நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்தார். அவரை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தேடிய போதும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் குளத்திற்குள் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுதலை மேற்கொண்டதில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் பன்சலகொட வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த லியனகே சத்துரங்க என்பவரே இறந்துள்ளார். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன

ad

ad