செப்ரெம்பர் மாத இறுதிக்குள் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்று அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது. எனினும், இன்றளவும் அவ்வாறான எந்தவொரு அறிவித்தலும் விடுக்கப்படவில்லை. இது தொடர்பில் வினவியபோதே, இந்த மாதத்தின் இறுதிக்குள் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற உறுதிமொழி எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ளது. விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றியே தீருவோம். எனவே,பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்படுவது உறுதி. அதைத் தக்கவைப்பதற்கான எந்த நோக்கமும் இல்லை - என்றார். |