டாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும் ஆன்மீகத் தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது தெல்லிப்பளை துர்க்கையம்மன் வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, அநுர அரசாங்கம் மிகவிரைவில் கொண்டுவரவுள்ள ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பினுடைய ஆபத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.