![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு - கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாம் நாள் பேச்சு பிற்போடப்பட்டுள்ளது |
-
13 மே, 2023
இரண்டாம் நாள் பேச்சு நடக்கவில்லை - திங்களுக்கு ஒத்திவைப்பு!
ஷித் கான் போராட்டம் வீண்: 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
12 மே, 2023
ஸ்கொட்லாந்தில் முதல்முறையாக தானியங்கி பேருந்து சேவை துவக்கம்!
பிரித்தானியாவில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. ஸ்கொட்லாந்தில் திங்கட்கிழமை முதல் ஓட்டுநர் இல்லா பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது பிரித்தானியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சாதனையாக பார்க்கப்படுகிறது. |
காலிமுகத்திடல் போராட்டத்தை வன்முறையாக மாற்றியது ஆளும்கட்சியினரே!
![]() அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதி காலை ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும் மே 9 ஆம் திகதிக்கு பின்னரே போராட்டம் வன்முறையாகியது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் |
ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பு குறித்து தமிழ் எம்.பிக்கள் அதிருப்தி!
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு திருப்திகரமாக அமையவில்லை என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நேற்றைய சந்திப்பின் பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் இதனை்த் தெரிவித்துள்ளனர். |
இம்ரான் கானின் கைது சட்டவிரோதமானது: அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்!
![]() பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் கட்சியினர் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் வெற்றி பெற்ற கவுன்சிலர் பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல்களைப் பொருத்தவரை, இம்முறை, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் தோல்விகளை சந்தித்துள்ளது |
வெடுக்குநாறிமலை ஆலய பூசாரி உள்ளிட்ட இருவர் கைது! - நீதிமன்றம் விடுவிப்பு
![]() வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். |
இனப்பிரச்சினை குறித்த பேச்சு இன்று ஆரம்பம்!
![]() இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதிக்கும் வட - கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான 3 நாட்கள் தொடர் பேச்சுவார்த்தைகள் இன்று ஆரம்பமாகின்றன. |
11 மே, 2023
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கிணற்றில் தவறி விழுந்து மரணம்
![]() யாழ்ப்பாணம்- இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து இரண்டரை வயதான சிறுமி மரணமடைந்துள்ளார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர் |
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி
![]() முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மண்ணில் இன்று மதியம் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து முள்ளிவாய்க்கால் முற்றத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. |
கனடாவில் லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளி சசிட் மெஹ்ரா தேர்வு!
![]() கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந் சசிட் மெஹ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
10 மே, 2023
நாசரின் அமைச்சர் பதவி பறிப்புக்கு காரணங்கள் என்ன..! மகனால் பறிபோனதா...?
ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்ற தகவல்
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு
பாலியல் வழக்கில் சிக்கிய டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு
![]() பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் E Jean Carroll என்பவர் முன்னெடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது |
வியாழன்- நல்லிணக்கம், வெள்ளி அதிகாரப்பகிர்வு, சனி - ஒத்திவைப்பு!
![]() வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கி நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது |
ரொனால்டோவை தொடர்ந்து மெஸ்ஸியின் அதிரடி முடிவு: புதிய கிளப்பில் ஒப்பந்தம்
கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் தொடர்ந்து லியோனல் மெஸ்ஸியும்
வடக்கு - கிழக்கு இணைப்புக்கு இந்திய தூண்டுதல்
இன்றைய நாளில் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ்
அவுஸ்திரேலிய அதிகாரிகளால்நாடு கடத்தப்பட்ட 41 இலங்கையர்கள்
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட,
பாடசாலை மாணவியொருவரின் விபரீத முடிவு! பொலிஸார் தீவிர விசாரணை
களுத்துறை காட்டுப்பகுதியில் 16 மாணவிகள் துஷ்பிரயோகம்! ஆசிரியர் தப்பியோட்டம்:
களுத்துறையில் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம்
92,000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் இருகின்றனர்
9 மே, 2023
சம்பந்தனில் இல்லத்தில் சந்திப்பு - ஏனைய கட்சிகள் புறக்கணிப்பு!
![]() தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்குத் தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது |
பாராளுமன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை கைப்பற்றுங்கள் பின்னர் நினைவேந்தலை கைப்பற்றலாம்
![]() முதலில் பாராளுமன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை கைப்பற்றுங்கள் பின்னர் நினைவேந்தலை கைப்பற்றலாம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நினைவேந்தல்களை குழப்பும் தரப்புகளுக்கு காட்டமாக தெரிவித்தனர் |
8 மே, 2023
வடக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் ஆளுநர் பிஎஸ்எம். சார்ள்ஸ, கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான
![]() வடக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் ஆளுநர் பிஎஸ்எம். சார்ள்ஸையும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். |
6 மே, 2023
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்-சம்பந்தன்
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 4 ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தல்!
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 4 ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தல்!
![]() 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது. கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது |
புதிய ஆளுநர்கள் நியமனம் வரும் நாட்களில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது |
கந்தரோடையில் விகாரை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக நாளை போராட்டம்!
![]() கந்தரோடையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை கண்டித்து வலிகாமம் தமிழ்த் தேசியப் பேரவை பல அமைப்புகளுடன் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது |
அரியாலை விபத்தில் கணவன் பலி - மனைவி படுகாயம்
![]() யாழ்ப்பாணம் -அரியாலை பூம்புகார் பகுதியில் வெள்ளிக்கிழமை ஹயஸ் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் |
5 மே, 2023
ராஜபக்ஷர்களுடன் இனியொருபோதும் இணையமாட்டேன்!
![]() ராஜபக்ஷர்களுடன் இனியொருபோதும் ஒன்றிணைய போவதில்லை என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். |
கள்ள நோட்டுடன் கைதானவர் யாழ்.பல்கலைக்கழக மாணவன்!
![]() யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் பளை பகுதியில் பெருமளவு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 250 உம், 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 27உம் இவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. |
ஜனாதிபதி வேட்பாளர் பஷில்?
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம். ராஜபக்ஷர்களே மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார் |
தையிட்டிப் போராட்டத்தில் அணிதிரள அழைப்பு!
![]() வலி வடக்கு தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின் இறுதி நாளான இன்று இடம்பெறும் போராட்டத்திற்காக தையிட்டிக்கு அனைவரையும் அணி திரளுமாறு தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது |
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்! - ஐஎம்எவ் கிடுக்கிப்பிடி.
![]() உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது |
தையிட்டி விகாரை விவகாரம் - ஆவணங்களை ஆராயப் போகிறாராம் டக்ளஸ்!
![]() தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆராயவுள்ளதுடன் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார் |
2 மே, 2023
ரணியில் கோர விபத்து - இளைஞன் பலி
![]() யாழ்- வரணிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.10 மணியளவில் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில், வரணி எருவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது |
வவுனியாவைச் சேர்ந்தவரை யாழ்ப்பாணத்துக்கு கடத்திச் சென்று சித்திரவதை! - பெண்கள் உள்ளிட்ட 11 பேர் கைது
![]() வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் |
தமிழரசு தலைமையை குறிவைக்கும் மூவர்! - அம்பலப்படுத்திய மாவை.
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் அப் பதவிக்கு குறிவைத்துள்ளதாகவும், அவர்களோடு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் தலைமைப் பதவிக்கு குறி வைத்துள்ளதாகவும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார் |
1 மே, 2023
நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருள் விலைகள்
![]() நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது |
களை கட்டும் மேதினப் பேரணிகள்
![]() சர்வதேச தொழிலாளர் தினமான மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது |
மஹிந்தவை பிரதமராக நியமிக்குமாறு கோரவுள்ள மொட்டு
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மே தினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கான யோசனையை முன்வைக்கவுள்ளது. ராஜபக்ஷர்களை மீண்டும் பதவிகளில் அமர்த்துவதற்காகவே இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார் |
30 ஏப்., 2023
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 11 வயது பிக்கு! விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பியோட்டம்
11 வயதுடைய பிக்கு ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயாகல கொகரதெனிய விகாரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிக்குவின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பியோட்டம்
பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் விகாரையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு முதல் குறித்த பிக்கு, விகாராதிபதி மற்றும் இரண்டு தேரர்களால் அவர்களது அறைகளில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்கு வைத்தியசாலையில்
சம்பவத்திற்கு முகங்கொடுத்த பிக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பயாகல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் உபாந்த டி சில்வா தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
28 ஏப்., 2023
உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்கும் நோட்டோ
![]() உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள் மற்றும் 230 இராணுவ டாங்கிகளை நோட்டோ நட்பு நாடுகள் கொடுத்து இருப்பதாக நோட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க் வியாழக்கிழமை தெரிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட நோட்டோ நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். |
27 ஏப்., 2023
கெய்க்வாட், ஷிவம் துபே அதிரடி வீண்: 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி
புடினை கொல்ல உக்ரைன் அனுப்பிய இரகசிய ட்ரோன் விமானம்: அம்பலப்படுத்திய ஜேர்மன்
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது அரசாங்கம்!-கஜேந்திரகுமார்
![]() நாடு வங்குரோத்து நிலைக்கு செல்வதற்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்திருந்ததாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் |
நெடுந்தீவில் உயிர் தப்பிய 100 வயது மூதாட்டியும் மரணம்
![]() யாழ்ப்பாணம் நெடுந்தீவில் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 100 வயதான மூதாட்டி இன்று உயிரிழந்துள்ளார். |
குருந்தூர் மலை விகாரை கட்டுமானத்தை பார்வையிடவுள்ள நீதிவான்
![]() முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாணைகள் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. |
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் விக்ரகங்களை மீண்டும் வைக்க நீதிமன்றம் உத்தரவு
![]() வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, எடுத்துச் சென்றுள்ள விக்கிரகங்களையும் ஆலய பரிபாலனசபையிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
சாணக்கியனிடம் மன்னிப்புக் கோரினாார் அலி சப்ரி!
![]() வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார 'இனவாதி, புலி' என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி 'இனவாதி, முட்டாள்' என்றும் பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்து எனக்கு எதிராக கருத்துக்களை குறிப்பிட்டார்கள். இவ்விருவரின் கருத்துக்களால் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. ஆகவே இவ்விருவரும் இரண்டு வாரங்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக் கொள்வதற்கு தடை விதிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபாநாயகரிடம் வலியுறுத்தினார் |
நெடுந்தீவில் ஐந்து வயோதிபர்கள் கடற்படை முகாமுக்கு கடற்படை , இராணுவத்துக்கும் தொடர்பு உள்ளதா
![]() நெடுந்தீவில் ஐந்து வயோதிபர்கள் கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து நபர் ஒருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கடற்படை , இராணுவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது ஆராயப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார் |
பால்டிக் கடலில் ரஷ்யப் போர் விமானங்கள் வழிமறிப்பு
முல்லைத்தீவு – மல்லாவி, வவுனிக்குளத்தில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்
![]() முல்லைத்தீவு – மல்லாவி, வவுனிக்குளத்தில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குளத்திற்கு நீராடச் சென்ற போதே, இந்த அனர்த்தம் நேரிட்டுள்ளது. |
முல்லைத்தீவில் குட்டிகளுடன் கிணற்றில் விழுந்த யானை
![]() முல்லைத்தீவில் விவசாய கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகளை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், பாதுகாப்பாக ) மீட்டுள்ளனர். முல்லைத்தீவு, முள்ளியவளை தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள களிக்காடு விவசாய கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் தாய் யானை ஒன்றும் இரண்டு குட்டிகளும் வீழ்ந்துள்ளன. இந்த யானைகள், நேற்று முன்தினம் இரவு வீழ்ந்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள். |
26 ஏப்., 2023
கிழக்கு மாகாண ஆளுநராக தமிழர்! வடக்கு உட்பட பல மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள்
விருது வழங்கும் விழா; மனைவியிடம் தமிழில் பேசும்படி கூறிய ஏ.ஆர். ரகுமான்
சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் மனைவியிடம் இந்திக்கு
கட்டுநாயக்கவில் தரையிறங்க முடியாமல் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்
![]() நேற்று மாலை நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், அங்கு தரையிறங்க முடியாத நிலையில் மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மாலைதீவிலிருந்து பயணித்த, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 116 என்ற விமானமும், சென்னையில் இருந்து பயணித்த யூ.எல். 128 என்ற விமானமும் மற்றுமொரு விமானமும் மத்தளவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. |
கொடிகாமத்தில் விபத்து பொலிஸ் பலி! - மற்றொருவர் படுகாயம்!
![]() கொடிகாமம்- எருவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் |
முழு முடக்கப் போராட்டம் வெற்றி! - நன்றி தெரிவித்து அரசியல் கட்சிகள் அறிக்கை
![]() வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த, தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் பணியாற்றி வரும் ஏழு கட்சிகளும் கூட்டாக தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு |
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்! -திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்தார் சுமந்திரன்.
![]() பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்தக் கூடியவாறான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக சபையில் சமர்ப்பித்தார் |