புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2023

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்! -திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்தார் சுமந்திரன்.

www.pungudutivuswiss.com


பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்தக் கூடியவாறான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக சபையில் சமர்ப்பித்தார்.

பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்தக் கூடியவாறான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக சபையில் சமர்ப்பித்தார்

பிரதி சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை கூடிய பாராளுமன்ற அமர்வின் போது எம்.ஏ.சுமந்திரன் இந்த தனிநபர் பிரேரணையை முன்வைத்தார்.

1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்தும் வகையில் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் தனிநபர் சட்டமூலமாக முன்வைக்கப்பட்ட நிலையில் அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இதற்கமைய குறித்த சட்டமூலத்தின் முதல் வாசிப்பு செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை சுமந்திரன் சமர்ப்பித்தவுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அந்த சட்ட மூல திருத்தத்தை ஆதரித்து வழிமொழிந்தார்.

ad

ad