புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2023

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது அரசாங்கம்!-கஜேந்திரகுமார்

www.pungudutivuswiss.co

நாடு வங்குரோத்து நிலைக்கு செல்வதற்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்திருந்ததாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து நிலைக்கு செல்வதற்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்திருந்ததாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோதே தாம் இதனை வலியுறுத்தியதாகவும் ஆனால் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க அதனை எதிர்திருந்தாகவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாடு வங்குரோத்து நிலையை அடைந்த பின்னர், சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை தவிர வேறு வழியில் என குறிப்பிடுவதாக கஜேந்திரகுமார் குற்றம் சுமத்தியிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் கோரிய போதும் அரசாங்கம் அதனை இரகசியமாகவே வைத்திருந்தாகவும் தற்போது உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக தற்போது எதிர்கட்சியை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்

ad

ad