ஜி.கே.வாசன் காங்கிரஸில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குமான மோதல். ‘புதுசா கட்சிக்கு வந்தவங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்’ என்று குஷ்புவை மறைமுகமாகக் குறிப்பிட்டு விஜயதரணி பேசியதாகச் செய்திகள். என்னதான் நடக்குது அங்கே? விஜயதரணியிடம் பேசியதில்...
‘‘வரவர ரணகளமாகிட்டே போகுதே காங்கிரஸ் கட்சி?”
‘‘காங்கிரஸ் தேசிய அளவிலான ஜனநாயகக் கட்சி. இங்கே யாருக்கும் எந்தக் கருத்தையும் வெளிப்படையாகவே முன்வைக்கிற சுதந்திரமும், உரிமையும் இருக்கு. ஆனால் முன்வைக்கிற கருத்துகள், ஆலோசனைகள் கட்சியைப் பலவீனப்படுத்தாத அளவுக்கு நடந்துகொள்ள வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு. கட்சியை பலவீனப்படுத்தும் விதமா வைக்கிற கருத்துகளைக் கட்சியின் விதிமீறலாகத்தான்