வல்வெடடித்துறை தீருவில் தூபி பகுதியில் உள்ளுர் இளைஞர்கள் மேற்கொண்ட சிரமதானப்பணிகள் இலங்கை காவல்துறையால் இன்று காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் இலங்கை காவல்துறையினர் நிலை கொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.
-
22 நவ., 2019
21 நவ., 2019
பிள்ளையானுடன் இணைந்த பிரதேச சபை உறுப்பினர்முரளிதரனை நீக்கியது தமிழரசு
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது, கட்சித் தீர்மானங்களை மீறி, கட்சி மாறிச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் முரளிதரனை,
ரணில் விலகாவிடின் புதிய கட்சி
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க உடனடியாக விலகி சஜித் பிரேமதாசவுக்கு வழிவிட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
தூக்கப்படுகிறார் சிஐடி பணிப்பாளர் ஷானி
பாரிய குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய, அனுபவம் மிக்க, குற்றப் புலனாய்வாளரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு வேறு கடமைகளில் அமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
69 எம்.பிக்கள் அதோ கதி!
நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படுமாயின் 69 எம்.பிக்கள் தமது ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.2015ம் ஆண்டு ஓகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே
சற்று முன்னர் பிரதமராக பவியேற்றார் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்பாக பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பகல் நடைபெற்றது.
கனடாவில் தமிழர் பாரம்பரியத்தின் பின்னணி கொண்ட முதலாவது அமைச்சர் அனிதா ஆனந்த்
![]()
இன்று (புதன் 20/11/2019) பதவியேற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் ஓக்வில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனிதா ஆனந்த் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள இவர், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராக கடமையாற்றியவராவார்
|
யாழ்.நகர விடுதியில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!- உடந்தையாக இருந்த இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் 16 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு, உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ். நகரில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றுபவர் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 நவ., 2019
சிறீகாந்தாவா? செல்வமா? பலசாலி: பிளவடையும் டெலோ!சிறீகாந்தா தரப்பு மேற்கொண்ட முயற்சி தோல்வி
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமையினை முழுமையாக கைப்பற்ற சிறீகாந்தா தரப்பு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று யாழில் நடத்திய கூட்டத்திற்கு போட்டியாக தனது அலுவலகத்தில் கூட்டமொன்றை கூட்ட அவர் முற்பட்ட போதும் அது தோல்வியில் முடிவமைடந்துள்ளது..
எச்சரிக்கை -சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ள தமிழ் இளைஞர் குடியுரிமையை பறித்துவி ட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளார் லங்கன்தாள் பகுதியை சேர்ந்த 25 வயதான தமிழ் இளைஞர் சுவிஸ் நாட்டிடை சேர்ந்த ஒருவரை தாக்கி கோமா நிலைக்கு செல்ல வைத்துள்ளார் சுகமாகி மீண்டு வந்த இந்நாடடவர் தொடுத்த வழக்கின் பின்னர் சில ஆண்டு சிறைவாசம் சென்று மீண்டவர் மீண்டும் மற்றுமொருவரை தாக்கி காயம் அடைய வைத்துள்ளார் இந்த இரண்டு சம்பவங்களையு ம் தனது அணியை சேர்ந்த நண்பர்களுக்காகவே நடத்தியுள்ளார் திருமணமாகிய இவர் பெற்றோரும் இங்கேயே வசித்து வருகின்ற நிலையில் இவரது சுவிஸ் குடியுரிமையை பறி த்த பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுள்ளார்
அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க சஜித் முடிவு கட்சிக்குள் சிலர் மேற்கொண்ட சதிகளாலேயே தோல்வி
ஐக்கிய தேசிய கட்சிக்குள் சிலர் மேற்கொண்ட சதிகளாலேயே ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி கண்டதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போது சஜித் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
கோத்தாவிடம் தோற்போம் என்று தெரியும்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மனோ
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமைக்கான காரணம் தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் விளக்கமளித்துள்ளார்.
தனது போஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
இராஜினாமா கடிதத்தை அனுப்பினார் ரணில்; மாலை விசேட உரை
நாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து தென்னிலங்கை அரசியல் வட்டாரம் மேலும் பரபரப்பாகியுள்ளது.
மோடியின் செய்தியுடன் வந்த ஜெய்சங்கர்- 19ஆம் திகதி டில்லி செல்கிறார் கோத்தா
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நேற்று மாலை குறுகிய நேரப் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்து,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசினார்.
19 நவ., 2019
மஹிந்தவுக்கு பிரதமர் பதவி இல்லை
ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில், அவர் தலைமையில் அமையவுள்ள காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியுடன் பேசிய பின்னர் இறுதி முடிவு
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கொண்டு செல்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மதிக்க வேண்டும்! - கோத்தாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
மனித உரிமைகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மதிப்பளிக்க வேண்டும் என்று என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வொசிங்டனில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இதனை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய!: மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)