-

27 செப்., 2025

www.pungudutivuswiss.com

தவெக பரப்புரை | கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் உயிரிழப்பு? சோகத்தில் மூழ்கிய கரூர்!

கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்ட தொண்டர்களில் 29 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளிய

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை, கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கிய தவெக தலைவர் விஜய், அதன் தொடர்ச்சியாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரண்டு மாவட்டங்களில் பரப்புரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரையை முடித்துக்கொண்டு கரூருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எனினும், அவரைக் காண்பதற்காக தொண்டர்கள் கூட்டம் ஆரம்பம் முதலே அலைமோதியது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மேடையில் பேசிக் கொண்டிருந்த தவெக தலைவர் விஜய், உடனே பேச்சை நிறுத்திவிட்டு கீழே நடக்கும் நிலை குறித்து விசாரித்தார். அப்போது தொண்டர்கள் தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களைத் தூக்கி வீசினார். பின்னர் மயக்கம் அடைந்தவர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வரச் செய்வதற்கு உத்தரவிட்டார்.

பின்னர் ஆம்புலன்ஸ் வந்த நிலையில், மறுபுறம் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். ஆனால், தொண்டர்களின் தள்ளுமுள்ளு காரணமாக, ஆம்புலன்ஸ் விரைந்து செல்வதிலும் கால தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், விஜய் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். பின்னர், ஒருவழியாக ஆம்புலன்ஸ் சென்ற நிலையில், தன்னுடைய பேச்சைத் தொடர்ந்து பேசி முடித்தார். இறுதியில் குழந்தை ஒன்று காணாமல் போனதாக அறிவித்துவிட்டு பரப்புரை பேருந்தில் இருந்து கீழே இறங்கினார். இதற்கிடையே பரப்புரையில் சிக்கி மயக்கம் ஏற்பட்ட பலரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக, பரப்புரை நடந்த இடத்தில் கூட்டம் கலைந்தபிறகு தள்ளுமுள்ளுவால் பலரும் கீழே மயக்கமடைந்தனர். இதனால் தவெகவின் பரப்புரை நடைபெற்ற இடமே களேபரமானது. இதையடுத்து ஆம்புலன்ஸ்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் பெண்களும் கரூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே உள்ளனர். கூட்டம் கரூர் மருத்துவமனையில் அலைமோதுவதால் அங்கு துயரமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிருக்குப் போராடுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அதில் 29 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

tvk chief vijay campaign 10 people killed in karur
நாமக்கல் தவெக பரப்புரை| ”சொன்னீர்களே.. செய்தீர்களா?” திமுக, அதிமுகவை விமர்சித்த விஜய்!

இச்சம்பவம் குறித்து தமிழக ,முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் @Anbil_Mahesh அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

www.pungudutivuswiss.com
தமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்கள்! Top News
[Friday 2025-09-26 17:00]
“தியாக தீபம்” திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம்  பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.

“தியாக தீபம்” திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டது

www.pungudutivuswiss.com
காற்றாலை வாகனங்களை தடுத்த மக்கள் மீது பொலிஸ் தாக்குதல்- பலர் படுகாயம்!
[Saturday 2025-09-27 08:00]


மன்னாரில் நேற்று இரவு 10 மணி முதல் காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில், பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலர் காயமடைந்திருக்கின்றனர்.

மன்னாரில் நேற்று இரவு 10 மணி முதல் காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில், பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலர் காயமடைந்திருக்கின்றனர்.

www.pungudutivuswiss.com
பிரசவத்தின் போது வலிப்பு - இரட்டைக்குழந்தைகளும் தாயாரும் மரணம்!
[Saturday 2025-09-27 08:00]


யாழ். போதனா வைத்தியசாலையில் இரட்டை சிசுக்கள் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவித்த போது உயிரிழந்த நிலையில் மயக்கமடைந்த நிலையில் இருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இரட்டை சிசுக்கள் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவித்த போது உயிரிழந்த நிலையில் மயக்கமடைந்த நிலையில் இருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

யாழில் நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

w

26 செப்., 2025

www.pungudutivuswiss.com
மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்!முதல் 10 இடங்களில் இலங்கை 
[Thursday 2025-09-25 03:00]

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது.

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது.

சம்பத் மனம்பேரியின் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணம்

www.pungudutivuswiss.com
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்

பரபரப்பான விண்வெளி போர்: ஜெர்மனி இராணுவ செயற்கைக்கோள்களைத் துரத்தும் ரஷ்யா!

www.pungudutivuswiss.com
பரபரப்பான விண்வெளி போர்: ஜெர்மனி இராணுவ செயற்கைக்கோள்களைத் துரத்தும் ரஷ்யா!

விண்வெளியில் போர் மூளுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தும்

நேட்டோ படைகளுக்கு சவால் விடுத்த ரஷ்ய வீரர்கள்: எஸ்டோனிய வான்வெளியில் பதற்றம்! Posted by By tamil

www.pungudutivuswiss.com
நேட்டோ படைகளுக்கு சவால் விடுத்த ரஷ்ய வீரர்கள்: எஸ்டோனிய வான்வெளியில் பதற்றம்!

எஸ்டோனிய வான்வெளியில் ரஷ்ய போர் விமானங்க

தமிழரசு தனி ஓட்டம்:கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

www.pungudutivuswiss.com


பிரான்ஸின்முன்னாள் ஜனாதிபதி சர்கோசிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை





25 செப்., 2025

www.pungudutivuswiss.com
மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்!
[Thursday 2025-09-25 03:00]

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது.

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது.

www.pungudutivuswiss.com
இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் பேச நேரம் கேட்கிறது தமிழரசு!
[Wednesday 2025-09-24 18:00]


தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சந்திப்பைக் கோரி இலங்கைத் தமிழ் அரசு கட்சி  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.
குறித்த கடிதத்தில், எமது கட்சியின் அண்மைய மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கமைய நீங்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது.

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சந்திப்பைக் கோரி இலங்கைத் தமிழ் அரசு கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில், எமது கட்சியின் அண்மைய மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கமைய நீங்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது.

www.pungudutivuswiss.com
தலாவவில் கோர விபத்து - 3 பேர் பலி!
[Thursday 2025-09-25 08:00]


குருணாகல்-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வானும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர் மேலும் நால்வர் காயமடைந்தனர். இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல்-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வானும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர் மேலும் நால்வர் காயமடைந்தனர். இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

www.pungudutivuswiss.com
குருநாகலில் கேபிள் கார் அறுந்து 7 பிக்குகள் பலி- 6 பேர் படுகாயம்!
[Thursday 2025-09-25 08:00]

குருநாகல் - மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று மாலை பௌத்த பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு ரஷ்ய பிக்குகளும், கம்போடிய பிக்கு ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த கேபிள் காரில் 13 மதகுருமார்கள் பயணித்துள்ளனர்.

குருநாகல் - மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று மாலை பௌத்த பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு ரஷ்ய பிக்குகளும், கம்போடிய பிக்கு ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த கேபிள் காரில் 13 மதகுருமார்கள் பயணித்துள்ளனர்.

24 செப்., 2025

இலங்கையில் சிக்கப் போகும் அதியுச்ச அரசியல் தலைமை! பரபரப்பாகும் தென்னிலங்கை

www.pungudutivuswiss.com


இலங்கையில் பிரபல அரசியல் தலைவர் ஒருவர் வெகு விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் அதிகாரியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.

பிரபல யூடியுப் செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலக குழுக்களுடன் முன்னாள் ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய பிரபல கட்சியை சேர்ந்த பலர் நேரடி தொடர்பு வைத்துள்ளனர். பாதாள உலக குழு உறுப்பினர்களால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள தாயை கண்டுபிடித்தால் பெறுமதியான பணப்பரிசு! ஐரோப்பா வாழ் இலங்கை பெண்

இலங்கையிலுள்ள தாயை கண்டுபிடித்தால் பெறுமதியான பணப்பரிசு! ஐரோப்பா வாழ் இலங்கை பெண்

பல முக்கிய தகவல்கள் 

இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களால் புலனாய்வு பிரிவிற்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் முக்கிய பல தகவல்களை தற்போது வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிக்கப் போகும் அதியுச்ச அரசியல் தலைமை! பரபரப்பாகும் தென்னிலங்கை | Famous Politician To Be Arrest In Sri Lanka

அவ்வாறான தகவல்களை வெளியிட்டால் கைது செய்யப்படவுள்ள பிரபல அரசியல் தலைமை தப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

பாதுகாப்பு படைப்பிரிவு அல்லது பொலிஸ் அதிகாரியின் உடையில் வரும் மர்ம நபர்களால் ஜனாதிபதி கொலை செய்யப்படலாம் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதாள குழு உறுப்பினர்களுடன் அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளமை அண்மையில் கைது செய்யப்பட்ட மனம்பேரி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கெஹெல்பத்தர பத்மே மற்றும் நகர பிதாவான எரங்க சேனாரத்ன டுபாயில் ஒன்றாக நீச்சல் தடாகத்தில் குளிக்கும் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. தங்காலையில் மிகப்பெரிய அளவில் ஐஸ் போதைபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஐஎஸ் போதைப்பொருள் மீட்பின் போது 3 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருடன் பாதாள உலக குழுவிற்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டது.

சிக்கவுள்ள மற்றுமொரு பாதாள உலகக் குழுத் தலைவர் : விசாரணையில் வெளிப்பட்ட தகவல்கள்

சிக்கவுள்ள மற்றுமொரு பாதாள உலகக் குழுத் தலைவர் :

யாழ் புங்குடுதீவு பகுதியில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திபவனி

www.pungudutivuswiss.com


ad

ad