-

22 மே, 2026

ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் அழுந்தி கிடக்கும் வார்த்தைகள்.." ஆ.ராசா கருத்திற்கு சிபிஎம் விமர்சனம்!

www.pungudutivuswiss.com
தவெக அமைச்சரவையில் பங்கேற்ற விசிகவை கடுமையாக விமர்சித்த ஆ.ராசாவின் கருத்தை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வாசுகி விமர்சித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் தரையிறங்க முடியாத விமானங்கள்- மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டன! [Friday 2026-05-22 18:00]

www.pungudutivuswiss.com


 மோசமான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. 
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 9விமானங்களே இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. 
தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மோசமான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 9விமானங்களே இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பசில் ராஜபக்‌ஷவுக்கு பிடியாணை! [Friday 2026-05-22 18:00]

www.pungudutivuswiss.com



முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

டொலரின் மதிப்பு ரூ. 354.03ஐ தொட்டது! [Thursday 2026-05-21 16:00]

www.pungudutivuswiss.com



அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி  இன்று மேலும் பாரிய சரிவைக் கண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 342.63 ஆகவும், அதன் விற்பனை விலை ரூ. 354.03 ஆக உயர்ந்துள்ளது.
இது கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த அமெரிக்க டொலர் மாற்று விகிதம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மேலும் பாரிய சரிவைக் கண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 342.63 ஆகவும், அதன் விற்பனை விலை ரூ. 354.03 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த அமெரிக்க டொலர் மாற்று விகிதம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜூக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய ரவிகரன்! [Thursday 2026-05-21 16:00]

www.pungudutivuswiss.com



விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜூக்கு  பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் இன்று  உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரிகேடியர் பால்ராஜ்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜூக்கு பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரிகேடியர் பால்ராஜ்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

21 மே, 2026

23 அமைச்சர்கள் பதவியேற்பு | மலர்ந்த கூட்டணி ஆட்சி.. மாற்றத்தை உருவாக்கிய விஜய்!

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் விஜயின் தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில்,

முதல்வர் அறையையும் விட்டு வைக்காத "தவெக ரீல்ஸ் கலாச்சாரம்".! பாட்டிலுக்கு 20 ரூபாய் என்று இப்போது விஜய் பாடுவாரா.!! தமிழிசை சரமாரி கேள்வி

www.pungudutivuswiss.com

மாகாண சபைத் தேர்தல்- தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பாணை! [Thursday 2026-05-21 08:00]

www.pungudutivuswiss.com

 மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழு முன்னிலையில் இன்று (21) முன்னிலையாகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழு முன்னிலையில் இன்று (21) முன்னிலையாகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

20 மே, 2026

தவெக அரசில் அமைச்சர்களாகும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்? விசிக நிலை என்ன?

www.pungudutivuswiss.com

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள்

www.pungudutivuswiss.com இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி 

தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்-க்கு 2 இடங்கள் ஒதுக்கீடு; கே.சி.வேணுகோபால் தகவல்!

www.pungudutivuswiss.com

சென்னை: தவெக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ்-க்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கே.சி.வேணுகோபால் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்க உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்

”அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமில்லை; தவெக தரப்பு தகவல்” - திருமாவளவன்!

www.pungudutivuswiss.com

பருத்தித்துறை நகரசபை:விசாரணைக்கு அனுமதி!

www.pungudutivuswiss.com

தமிழரசு குடுமிப்பிடி

www.pungudutivuswiss.com

பால்மா விலை அதிகரிப்பு! [Wednesday 2026-05-20 17:00]

www.pungudutivuswiss.com

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை! [Wednesday 2026-05-20 17:00]

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக, 1570 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக, 1570 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று (20) காலை பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, மிகவும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது.

குறித்தப் பிரச்சினை தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகளிடம் ஜனாதிபதி விடயங்களை கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து 1,570 ஏக்கர் நிலப்பரப்பினை உடனடியாக விடுவித்து மேய்ச்சல் தரைக்கு வழங்கும்படியும், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் மேய்ச்சல் தரை தொடர்பில் மேலும் தீர்க்கமான நல்ல முடிவுகளை எடுப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 10,900 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட 2306 வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இந்த ஆண்டு 8,625 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இக்கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டது.

கிராமியப் பாலங்கள், கிராமிய வீதிகள், வீட்டுத்திட்ட வேலைகள், நீர்ப்பாசன திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், எனப் நிர்வாக சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடுகள் வழங்கும் நடைமுறைகள் பற்றியும், இழப்பீடுகள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றியும், குறிப்பாக டித்வா புயல் காரணமாக விவசாயிகள் எதிர்கொண்ட இழப்பீடுகளுக்கான நட்டஈடுகள் எவ்வாறு வழங்கப்படுகின்றது என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் இரண்டு குளங்களை இணைத்து முன்னெடுக்கப்படவுள்ள முந்தனையாறு நீர்ப்பாய்ச்சல் குளம் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அது தொடர்பான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுத்து அபிவிருத்தி பணியை ஆரம்பிக்கவும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, புன்னக்குடா கைத்தொழில் பேட்டைக்கான நீர்வழங்கல் விடயம், பட்டிருப்புப் பாலம் மற்றும் குருமண்வெளி தொடக்கம் மண்டூர் வரையான பாலங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

5 மார்., 2026

ஈரான் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாக இத்தாலி கூறுகிறது

www.pungudutivuswiss.com


சமீபத்திய மத்திய கிழக்கு நெருக்கடியைத் தூண்டிய ஈரான் மீதான அமெரிக்க-

ad

ad