புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014


அமைச்சர் பவித்ராவை கெட்ட வார்த்தையால் திட்டிய பிரதியமைச்சர்

மின்வலு எரிசக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தன்னை பகிரங்க கூட்டங்களில் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தனக்கு அறிவிக்காமல் மின் விநியோக திட்டங்களை ஆரம்பித்து வைப்பது, வேலைவாய்ப்புகளை வழங்குவது குறித்தும் ஜனாதிபதியிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை அழைத்து ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளதாக கூறப்படுகிறது.
மின்வலு எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad