புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012


13வது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து ஜெயலலியாவுக்கு கடிதம் அனுப்பிய மன்மோகன் சிங்
 இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசேட கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கடிதத்தில் 13 வது அரசியல் யாப்பின் திருத்தம் குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த விடயம் குறித்தும் தமிழ் மக்களது உரிமைகள் குறித்தும் அதிகளவில் இந்தியாவில் கருத்துக்கள் பரிமாறப்படுவதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதவிர, இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு பிரஜாவுரிமைக்கான சான்றிதழ்கள் இலங்கை பிரதி உயர்ஸ்தானிகரகத்தினால் வழங்கப்பட்டதாக பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
240 பேருக்கே, இவ்வாறு பிரஜா உரிமை சான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டிருந்தன என தெரிவித்திருந்தார்.

ad

ad