புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012


பாடகி சின்மயி புகார்! 2வது நபர் கைது!
பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துகள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் 22.10.2012 அன்று நிப்ட் மையத்தின் துணை பேராசிரியர் சரவணக்குமார் பெருமாள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.



தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையிலும், மேலும் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடைப்படையிலும், ஏ.ராதாமணாளன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர் சென்னை பெரியமேட்டில் உள்ள தர்பார் ஹோட்டல் முன்பு 23.10.2012 செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் இவர். இவர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிகிறார். டிவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் மிகவும் துடிப்பான உறுப்பினர். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர், சின்மயிக்கு தான் எழுதிய கருத்துகள் குறித்து ஒப்புக்கொண்டார். பின்னர் இவர் எழும்பூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் சின்மயி கொடுத்த புகாரின் அடிப்படையில், கிரைம் பிரிவு போலீஸார், மேலும் சிலர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

ad

ad