புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013


நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை-புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் இரத்த மாதிரி போன்ற தகவல்கள் உள்ளடக்கப்பட உள்ளன.
நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் யோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகளவானோர் போலியான தேசிய அடையாள அட்டைகளை பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு போலி அடையாள அட்டைகள் பயன்படுத்தப்படுவதனால் குற்றச் செயல்கள் அதிகரிக்கக் கூடும்.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் போலியான தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் இரத்த மாதிரி போன்ற தகவல்கள் உள்ளடக்கப்பட உள்ளன.

ad

ad