புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013

கேகாலை - ரம்புக்கனை வீதியில் ரங்தெனிய, ரட்டகொப்பிவத்த பிரதேசத்தில் ´சுவசெத´ என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. 
கேகாலை வலய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அலுவலகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்று (04) மாலை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இந்த சோதனையின் போது விபச்சார விடுதியை நிர்வகித்த 44 வயதுடைய நபரும் விபச்சார விடுதி இயங்க ஒத்துழைப்பு வழங்கிய மூவரும் விபச்சார தொழிலில் அமர்த்தப்பட்ட மூன்று இளம் யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூன்று இளம் யுவதிகளும் 19, 21 மற்றும் 22 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்கள் இன்று (05) கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

ad

ad