வெளிநாட்டு நிதிக்கான ஆதாரத்தை கேஜ்ரிவால் வெளியிடவில்லை: ஷிண்டே பேட்டி
ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நன்கொடைகள் குறித்த தகவல்களை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவிக்கவில்லை என்று மத்திய
உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சிக்கான வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் குறித்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கேஜ்ரிவால் தெரியப்படுத்தவில்லை. இது குறித்து 3 முறை அவருக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஆனால், கேஜ்ரிவாலிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை என்றார்.