ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரியாணி விருந்து வைத்த அழகிரி
திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் மு.க.அழகிரி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. இரண்டு நாட்களும் அவர் மதுரையி
ல் அவரது இல்லத்தில்தான் இருந்தார்.
நேற்று அவர், தனது மகன் தயாநிதி அழகிரியை மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள அனாதைகள் இல்லத்திற்கு சென்று, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்துவரச்செய்தார்.