புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

ஐ.நா. அமர்வில் விசாரணைகளை கோருவதற்கு கமரூன் உரிய நடவடிக்கை! சி.வி.யிடம் பிரித்தானிய தூதுவர் தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா அமர்வில் சர்வதேச விசாரணையைக் கோருவதற்கான உரிய நடவடிக்கையை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் எடுத்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இலங்கைக்கான பிரித்தானிய நாட்டின் தூதுவர் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்த இலங்கைக்கான பிரித்தனிய தூதுவர் ஜோன் ரங்கின் வடமாகாண முதலமைச்சரை யாழ்.கோவில் வீதியுள்ள அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதனையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
ஆளுநருடன் சேர்ந்து ஒற்றுமையாக மாகாணசபையை நிர்வகித்தால் என்ன? என்று எம்மிடம் கேட்டிருந்தனர். இதற்கு பதிலளித்த நான், ஆளுநருடனும் அரசுடனும் இணைந்து மாகாண சபையை நிர்வகிக்க நாங்கள் எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கின்றோம்.
அத்தோடு தனிப்;பட்ட ரீதியில் ஆளுநருடன் எங்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை பல சந்தர்ப்பங்களில் எங்களால் எடுக்கப்படும் பல தீர்மானங்கள் முறியடிக்;கப்படுகின்றது. என்று பதிலளித்தேன்.
இதனையடுத்த சர்வதேச விசாரணை குறித்து ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
இந்த விடயம் தொடர்பாக தானாகச் சொல்லவில்லை. அதேவேளை தங்களின் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையைக் கோருவோம் என்று கூறிய கூற்றுக்கு ஏற்ப நடவடிக்கையை எடுத்துக்கொண்டிருக்கின்றார் என்று எங்கள் மனசுக்கு சந்தோசம் அளிக்கும் விதத்தில் அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் தம்மிடம் கூறியதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ad

ad