புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

மனைவியை பிரிந்தார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரர்
ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவின் மனைவியான திலக்ருக்ஷி விக்ரமசிங்க அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிஷாந்த விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா விமான சேவையில் பணியாற்றும் விமானப் பணிப்பெண் ஒருவருக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதே இந்த பிரிவுக்கு காரணம் என தெரியவருகிறது.
விக்ரமசிங்கவின் மனைவியும் ஒரு விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றியவர். இலங்கை அரச விமான சேவையானது எயார் சிலோன் என்ற பெயரில் இயங்கிய காலத்தில் அவர் விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், அவரது கணவருக்கு விமானப் பணிப்பெண்ணுடன் தொடர்பிருக்கும் செய்தி வெளியானதை தொடர்ந்து தில்ருக்ஷி கணவருடன் கோபித்து கொண்டு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள அவரது மகனிடம் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad