புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014


வடகாட்டில் சீமான் :  நாம் தமிழர் கட்சியில் பிளவு 
நாம் தமிழர் இயக்கம் தொடங்கிய போது சீமானுடன் உறுதுணையாக இருந்து தமிழகம் முழுவதும் இளைஞர்களை இயக்கத்தில் இணைத்தவர் சுபா.முத்துக்குமார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டி கிராமத்தில் அவரது மனைவியின் தந்தைக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


அங்கு முத்துக்குமாருக்கு நினைவிடம் அமைப்பதற்கு சில உறவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் 3 ஆண்டுகள் கடந்தும் நினைவிடம் அமைக்கப்படவில்லை. இதை நாம் தமிழர் கட்சியும் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் முத்துக்குமாரின் ஆதரவாளர்களிடம் இருந்து வந்தது. அதனால் கட்சி தலைமையிடம் பலர் கேட்டும் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்காததால் அவர்கள் முத்துக்குமார் பேரவை உருவாக்கி உள்ளனர்.
   இன்று முத்துக்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது பெற்றோர்கள் தனியாக வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர். பிறது முத்துக்குமாரின் ஆதரவாளர்கள் தனித் தனியாக அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் மாலை 3.30 மணிக்கு நாம் தமிழர் கட்சி சீமான் புதுகோட்டையில் அவர் படுகொலையான இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வடகாடு வந்து அஞ்சலி செலுத்தினார்.
   ஒரே கட்சிக்குள் பல அணிகளாக வந்து அஞ்சலி செலுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad