புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014


ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

கடந்த வருடம் 05.09.2013 அன்று தமிழீழ விடுதலையை உயிரினும்
மேலாக நேசித்து தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு தமிழீழ விடிவிற்காய் போராடிய இரத்தினசிங்கம் செந்தில்குமரன் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர் தமிழீழ விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக ஜெனிவாவில் தீயினில் தன்னையே
ஆகுதியாக்கினார்.

சுவிஸ் சிசன் நகரில் வசித்து வந்த 35 அகவையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாரான இரத்தினசிங்கம் செந்தில்குமரன் சுவிஸ் நாட்டுக்கு வந்திருந்த காலந்தொட்டு இவர் எந்தவொரு ஒரு தமிழர்கள் நடத்திய போராட்டத்தையும் தவறவிட்டதில்லை.
அவரிடம் எந்த நேரத்திலும் தலைவரின் படமும், தேசியக் கொடியும் எப்பொழும் இருக்கும். அவர் தீக்குளிப்பதற்கு முன்னதாக தந்தையுடன் கைபேசியில் உரையாடியுள்ளார். உரையாடும் போது, தமிழீழம் மலரும் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் எனவும் இறுதியாகத் ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ எனக் கூறியுள்ளார்.
எல்லாம் ஓய்ந்து விட்டது என்று எல்லாரும் ஒப்பாரி வைக்கின்றார்கள் அவை அனைத்தினையும் பொய்யாக்கிவிட்டு மிகத்தேவையான காலத்தில் ஒரு நெருப்பினை மூட்டிவிட்டு ஓய்ந்து போயுள்ளான் ஈகைப்பேரொளி செந்தில்குமரன்.
புலம்பெயர் மக்கள் ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இழப்பினால் துடித்துள்ளார்கள். ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் தியாகம் ஒரு எழுச்சியின் தியாகம். எமது போராட்டத்திற்கு உயிர் ஊட்டுகின்ற தியாகம். அப்படியான ஒரு அர்ப்பணிப்பை வரலாற்றில் நிறுவிச்சென்றுள்ளான்.
ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் வீரம் உறுதியாக நாளை இன்னும் வலிமையான வரலாறாக மாறும் தமிழீழம் அடைவது உறுதி என்று நாம் சொல்லுவோம் அந்த தமிழீழத்தை அடையும் வரை ஓயமாட்டோம் என்று எதிர்வரும் 15.09.2014 அன்று ஐநா சபை முன்றலில் முழக்கமிடுவோம், ஈகைப்பேரொளி செந்தில்குமரன் மேல் ஆணையேற்போம், செந்தில்குமரன் கடைசிவரை விடுதலைக்காக வாழ்ந்து அவன் அதற்கு கொடுத்த தியாகத்தின் மேல் உறுதி ஏற்போம்.
சுவிஸ் வாழ் தமிழ் மக்கள், ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் எதிர்வரும் 15.09.2014 அன்று ஐநா சபை முன்றலில் நடைபெறும் தமிழ் இன அழிப்புக்கு எதிரான மாபெரும் பேரணியில் அலையென திரண்டு தமிழீழம் மலரும், அந்த காலத்தை விரைவில் உருவாக்குவோம் என்று ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இறுதி வார்த்தைக்கு “உங்களுக்கு உரித்தான உரிமைகளை நீங்களே வென்றெடுக்க வேண்டும்” உயிர் கொடுப்போம் வாருங்கள்.

ad

ad