புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2015

காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளமை தொடர்பில் ஆராயக் குழுவடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள்! ஆராய்ச்சியில் விசேட குழு


வடக்கு மக்களில் 80 சதவீதத்தினர் மைத்திரிக்கே வாக்களித்துள்ளனர். அவர்கள் மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். 

 
இதனை ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் சுட்டிக்காட்டுவேன் என்று தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன, வடக்கிலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களைக் குறைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
 
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியாவிலுள்ள முப்படையினர் மத்தியிலும் தனித் தனியே சந்திப்புக்களை நடத்தினார் பாதுகாப்பு அமைச்சர். இதன் பின்னர் தேநீர் விருந்துபசாரத்தின்போது ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
 
ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கே பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'வடக்கில் அமைக்கப்பட்டுள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களைக் குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் இணைந்து குழு அமைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்களுடனும் இது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்படும். 
 
இதனூடாகவே உயர் பாதுகாப்பு வலயங்களைக் குறைப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானத்துக்கு வர முடியும்' என்று குறிப்பிட்டார் அமைச்சர்.
 
அத்துடன் வடக்கில் தனியார் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளமை தொடர்பில் ஆராயக் குழு ஒன்று விசேடமாக நியமிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார் விஜேயவர்த்தன. 
 
'வடக்கில் 80 சதவீத மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்துள்ளனர். மாற்றம் வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. அவர்களுக்குரிய தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எடுத்துரைப்பேன்' என்றும் அவர் குறிப்பிட்டார்

ad

ad