புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2015

ஜெ., வழக்கின் தீர்ப்பு கூற இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு


ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூற இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. க.அன்பழகன் மனு மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசு சார்பில் பவானி சிங் ஆஜராகத் தடை விதிக்கக் கோரி அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். 

அன்பழகன் வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணை நடைபெற்று வருகிறது. அன்பழகன் வழக்கில் தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு கூறக் கூடாது என வழக்கறிஞர் கூறியுள்ளார். ஜெயலலிதா வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கூற தடைவிதிக்க அன்பழகன் வக்கீல் கோரிக்கை விடுத்துள்ளார்.

ad

ad