புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2015

கோத்தபாயவின் வங்கிக் கணக்குகளை ரகசிய பொலிசார் சோதிக்கவேண்டும் -காலி நீதவான்




எவன்கார்ட் வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய காலி நீதவான் நீதிமன்றம் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எவன்கார்ட் நிறுவன வழக்கு தொடர்பில் அதனோடு தொடர்புபட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் எவன்கார்ட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோரது வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய காலி நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ad

ad