தனக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்த, நீதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை நோக்கி சதாம் உசேன் சொன்ன வார்த்தைகள்
இதோ,
நீ… அமெரிக்காவின் பேச்சினை கேட்டு எனக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளாய். ஆனால் உன்னுடைய மரணம் நிகழப்போவது என்னுடைய மக்கள் கையால் தான் என்பதை மறந்துவிடாதே என்று கூறியுள்ளார்.
அந்த வார்த்தைகள் எத்தனை உண்மையாகி போனது இன்று. ஆம், சதாம் ஹுசைனை தூக்கிலிடும்படி தீர்ப்பு வழங்கிய நிதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை, ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் போராளி படைகள் பிடித்து அவரை தூக்கிலிட்டனர்.
சதாமிற்கு தூக்குதண்டனை விதித்த நீதிபதிக்கு மரண தண்டனை வழங்கி ஐ.எஸ்.ஐ.எஸ் தங்களின் வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளது
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனை தூக்கிலிட்ட நீதிபதிக்கு ஐ.எஸ்.எஸ். போராளிகள் மரண தண்டனையை நிறைவேற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2003ம் ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வந்தபோது அவர் ஷியா பிரிவன சிலரை கொன்றதாக குற்றம் சொல்லப்பட்டது உலக அரங்கில் ஆனால் அவருடைய ஆட்சிக்கு எதிராக நடந்த அட்கிரமகாரர்களை தான் அவர் கொன்றார்
இதனால் அவருக்கு எதிராக போர் தொடுத்த அமெரிக்காவிற்கு ஷியா பிரிவினரும் ஆதரவளித்துள்ளனர்.
எனவே சதாமின் ஆட்சி வீழ்ச்சியை நோக்கி சென்றதால், பதுங்கு குழி ஒன்றில் தலைமறைவான அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான் தீர்ப்பினால் கடந்த 2006ம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில் சதாமின் மராணத்தால் ஆத்திரம் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் தற்போது ஈராக்கின் நகரங்களை அடுத்தடுத்தாக கைபற்றி உள்ளனர்
மேலும் சதாமிற்கு தூக்குத்தண்டனை விதித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானிற்கு மரண தண்டனை வழங்கி ஐ.எஸ்.ஐ.எஸ் தங்களின் வெற்றியே உறுதி செய்து உள்ளனர்
இத்தகவலை சதாம் உசேனின் உதவியாளராக இருந்த இப்ராஹிம் அல் தெளரி சமூக வலைத்தளத்தில் உறுதி செய்து உள்ளார்