புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2018

மக்கள் ஏற்காத தீர்வை ஏற்கமாட்டோம்! - சம்பந்தன் உறுதி

எமது மக்கள் ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வை தாம் ஒரு போதும் ஆதரிக்க போவதில்லை என்பதை உறுதியுடன் கூறிக்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது இவ்வாறு கூறியுள்ளார்.
எமது மக்கள் ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வை தாம் ஒரு போதும் ஆதரிக்க போவதில்லை என்பதை உறுதியுடன் கூறிக்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது இவ்வாறு கூறியுள்ளார்.

“ஒருமித்த நாட்டிற்குள் போதிய சுயாட்சியை பெற்று, எமது உரிமையை அனுபவிப்பதற்கு நீண்டகாலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் ஒரு சுயாட்சி கோட்பாட்டையே நாங்கள் கோரியிருக்கின்றோம். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது. மீண்டும் ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரப்போகின்றார்களா? அல்லது இந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க செய்ய போகின்றார்களா? அத்துடன், தமிழ் மக்கள் எந்த விதத்தில் வாக்களிக்க போகின்றார்கள் என்பதை சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், எமது மக்கள் ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வை தாம் ஒரு போதும் ஆதரிக்க போவதில்லை என்பதை உறுதியுடன் கூறிக்கொள்வதாக இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad