புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2018

ஆலயத்தில் பிரசாரம் - மணிவண்ணனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

மாவிட்டபுரம் ஆலய சூழலில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன், ஆலய பிரதம குரு உள்ளிட்ட மூவர் இன்று மல்லாகம் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மாவிட்டபுரம் ஆலய சூழலில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன், ஆலய பிரதம குரு உள்ளிட்ட மூவர் இன்று மல்லாகம் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பேரவையில் இணைந்துள்ள தமிழர் சம உரிமை இயக்கத்தின் கொள்கை பரப்பு கூட்டமொன்று மாவிட்டபுரம் ஆலயத்தில் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை தமிழரசுக்கட்சி ஆலய சூழலில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்களினை முன்னிறுத்தியிருந்தது.

ad

ad