புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2018

முதல்வர் பற்றி அவதூறு பேச்சு-திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்கு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தி.நகர் டாக்டர் சதாசிவம் சாலையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் அவதூறாக பேசினார்.
மேலும் தமிழக அரசு பற்றியும் விமர்சனம் செய்தார்.இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மேகலை பாண்டிபஜார் சட்டம்-ஒழுங்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

ad

ad