புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2018

வடகிழக்கை பிரிக்கவே மணாலாறு ஆக்கிரமிக்கப்பட்டது!

முழுக்க முழுக்க வடக்கையும் கிழக்கையும் பிரிக்குமுகமாகவே மகாவெலி நீரைச் சாட்டி மகாவெலி அதிகாரசபை
வடமாகாணக் காணிகளைக் கையேற்றுள்ளது. மணலாறில் தொடங்கி தற்போதுமகாவெலி மூலம் சிங்களபேராதிக்கம் வடமாகாணத்தில் தொடர்கின்றதென வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மணலாறு நில ஆக்கிரமிப்பு தொடர்பில் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் உயர் நிலத்தில் இருந்து மணலை பதிவானநிலங்களுக்கு வாய்க்கால் ஒன்று கொண்டுசெல்லும் போது அதனை மணல் ஆறுஎன்றுகுறிப்பிடுவதுவழக்கம். முல்லைத்தீவில் உள்ளமணலாறுஎன்றகிராமம் முக்கியத்துவம் பெற்றதற்குக் காரணம் அது முல்லைத்தீவு ,அனுராதபுரம்,திருகோணமலை மேலும் வவுனியா மாவட்டங்களின் எல்லைக் கிராமமாக விளங்கியதே. அண்மையில்த்தான் அதன் பெயர் வெலிஓயா என்று மாற்றஞ் செய்யப்பட்டது. இன்று 18 கிராமங்களைக் கொண்டிருக்கின்றது வெலிஓயா. தற்போது 11,189 பேர்களை உள்ளடக்கிய 3336 குடும்பங்கள் இந்தக் குடியிருப்பில் வாழ்ந்துவருகின்றார்கள். இவர்களுள் பெரும்பான்மையோர் சிங்கள மக்கள்.
முன்னர் தற்போதைய வெலிஓயாவை உள்ளடக்கிய 42 கிராமங்களில் காலாதிகாலமாக தமிழ் குடும்பங்களே அங்கு வாழ்ந்து வந்துள்ளன. குடைசியாக எடுத்த விபரங்களின் படி ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் குறித்த 42 கிராமங்களில் வசித்துவந்துள்ளனர். மேற்படி கிராமங்கள் காலாதிகாலமாக விவசாயம் செய்து வந்த தமிழ்க் குடும்பங்கள் ஆவன. 1965ம் ஆண்டில் தொண்ணூற்றிஒன்பது வருடக் குத்தகையில் இக் குடியிருப்புக்களைச் சுற்றிய அரசநிலங்கள் தமிழ் வணிகப்பெருமக்கள் சிலருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.
மேலும் 10 தொடக்கம் 50 ஏக்கர் வரைதனிநபர்கள் குத்தகைக்குப்பெற்றிருந்தார்கள். பாரிய வணிக நிறுவனங்கள் பலஏக்கர் காணிகளை குத்தகைக்குப் பெற்றிருந்தார்கள். 16 நிறுவனங்கள் ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் குத்தகைக்குப் பெற்றிருந்தார்கள். நாவலர் பண்ணை,சிலோன் தியேற்றர்ஸ் பண்ணை,கென்ட் பண்ணை,புகையிரதக் குழுப் பண்ணை,தபால் அதிபர்கள் குழுப் பண்ணை,டொலர் பண்ணைபோன்றவை இவற்றுள் அடங்கின.
அரசாங்கம் தமிழ் முதலீட்டாளர்கள் பதினான்கு பேருக்குக்கொடுத்தமேற்படி 99 வருட குத்தகைகளை 1984 ம் ஆண்டில் இரத்துச் செய்து 42 கிராமங்களிலும் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை இராணுவம் கொண்டு விரட்டிஅடித்தது. இராணுவத்தினர் மேற்படி கிராமங்கள் தோறும் பாரிய கவச வாகனங்களில் சென்று 48 மணித்தியாலங்களுக்குள் தமிழ் குடும்பங்கள் தமது வீடு,காணிகளைவிட்டு வெளியேறவேண்டும் என்றுகட்டளை இட்டது. அவ்வாறு வெளியேறாதோர் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என்று ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து மக்களை அகற்றினர்.
இந்த இடங்களில் சிங்களவரை இராணுவம் குடியேற்றப் போகவிடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் போர் மூண்டது. இக்காலப்பகுதியில்த்தான் வரலாற்றுத் தடம் பதித்த ஒதியமலைப் படுகொலைகள் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது. ஒதியமலைக் கிராமத்தைஒருநாள் விடியற்காலைநேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்துவந்தவயதுவந்தஆண்கள் அனைவரையும் ஒதியமலைச் சனசமூகநிலையத்திற்குஅழைத்துச் சென்றுபடுகொலைசெய்தனர்.
வடக்கையும் கிழக்கையும் தொடர் தமிழர் வாழ் இடங்களாகதொடர்ந்திருக்கவிடஅரசாங்கம் விரும்பாததாலேயே இன்றுமகாவெலியைக் காரணம் காட்டிசிங்களக் குடியேற்றங்களுக்குஅரசாங்கம் வித்திட்டுள்ளது. மணலாற்றுடன் அரசாங்கத்தின் கபடத் திட்டம் முடிவடையவில்லை. தற்போதையஅரசாங்கம் கிழக்குமாகாணத்தில் வடமுனையில் (மதுறுஓயாவின் நதிப்படுக்கைநிலத்தில்) சட்டத்திற்குமாறாகக் குடியிருந்தசிங்களக் குடும்பங்களை(அவர்கள்அங்குதொடர்ந்திருப்பதற்குஎதிர்ப்புதெரிவிக்கப்பட்டுள்ளதால்) பதவியஎல்லைப் புறங்களில் கொண்டுவந்துகுடியேற்றநடவடிக்கைஎடுத்துவருகின்றது. அங்கிருந்து நெடுங்கேணிவரை சிங்களத் தொடர் குடியேற்றத்தைஏற்படுத்தவேண்டும் என்பதேஅரசாங்கத்தின் குறிக்கோளாகத் தெரிகின்றது. வடமாகாணத்திற்கும் கிழக்குமாகாணத்திற்கும் இடையில் ஒருசிங்களவர் வாழ் இடைநிலத்தைஉண்டாக்கிவடகிழக்குஇணைப்பைஏற்படாதுதடுப்பதேஅரசாங்கத்தின் குறிக்கோள்.
ஆரியகுண்டம்,டொலர் பண்ணைபோன்ற இடங்களில் காடுபற்றிப்போய் இருக்கும் நிலங்கள் துப்புரவாக்கப்படுகின்றன. நான்குதெருக்கள் பதவியாவில் இருந்துடொலர் பண்ணை,கும்பகர்ணன் மலை,ஆரியகுண்டம்,கொக்குச்சான் குளம்,கொக்குத் தொடுவாய்,வெடுக்கன் மலைபோன்ற இடங்களுக்குதிறந்தாகிவிட்டது. தற்போது இராணுவம்,விவசாயசேவைகள் அமைச்சு, இல்மினைட் கூட்டுத்தாபனம்,புகையிலை கூட்டுத்தாபனம்,பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்றநிறுவனங்களின் வாகனங்கள் இந்தஅரசதிட்டத்தைநடைமுறைப்படுத்தும் விதத்தில் பாவிக்கப்பட்டுவருகின்றன. டொலர் பண்ணைஅருகேஏற்கனவேசிங்களக் குடியேற்றம் நடந்தாகிவிட்டது.
தமிழ் பேசும் வவுனியா,முல்லைத்தீவுமாவட்டஅரசாங்கஅதிபர்களுக்கோ,பிரதேசசெயலாளர்களுக்கோ,காணிஅலுவலர்களுக்கோஅங்குநடைபெற்றுவருவதன் சூட்சுமம் தெரிந்துள்ளதாகத் தெரியவில்லை. அவர்களும் அரசுக்குப் பயந்துதெரிந்துகொள்ளமுனையவில்லையோஅல்லதுதெரிந்தும் மௌனம் காத்துவருகின்றார்களோதெரியவில்லை.
அந்தப் பிரதேசம் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டுஅங்குநடப்பவைஅனைத்தும் அந்தரங்கமாகவேநடைபெற்றுவருகின்றன.
முல்லைத்தீவுஎல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் புல்டோசர்கள் எனப்படும் நிலச்சமன் பொறிகள் அங்குஇரவில் வேலைசெய்யும் சத்தத்தைக் கேட்டுவருகின்றார்கள்.  பாரியநீர் தாங்கிச் செல்லும் குழாய்கள் அல்லதுபைப்புக்கள் அங்குகொண்டுசெல்வதுகாணப்பட்டுள்ளது.
1988ம் ஆண்டுஏப்ரல் மாதம் 16ந் திகதியவர்த்தமானிஅதுகாறும் மணல் ஆறு என்றழைக்கப்பட்ட இடத்தைவெலிஓயாஎன்றுகுறிப்பிட்டுள்ளது. அதற்குமுன்னர் அங்குவெலிஓயாஎன்றொரு இடம் இருக்கவில்லை. அதன் பின்னர் வெலிஓயா இலங்கையின் ஒருதனிமாவட்டமாகபிரகடனப்படுத்தப்பட்டது. பதவியவிற்குவடக்கில் இருந்தமணல் ஆறு பதவியவுடன் சேர்த்துவெலிஓயாஎன்றநாமத்துடன் 1987ல் அனுராதபுரநிர்வாகமாவட்டத்தினுள் உள்ளேற்கப்பட்டது.
முதலில் 1984ம் ஆண்டில் காணிஆணைக்குழுவின் கீழ் உலர்ந்தவலயவிவசாயகுடியிருப்பாகத் தொடங்கியமணல் ஆறு பின்னர் 1988ம் ஆண்டில் மகாவெலிபொருளாதாரமுகவாண்மையத்தினால் கையேற்கப்பட்டது. அதன் பின்னர் அதுமகாவெலி“எல்”வலயமாகபிரகடனப்படுத்தப்பட்டது. 1988ம் ஆண்டுஏப்ரல் 16ந் திகதிமணல் ஆறு உத்தியோகபூர்வமாகவெலிஓயாவாகப் பெயர் மாற்றப்படடது.
இங்குதான் மணலாறில் தொடங்கியபெரும்பான்மையினரின் பெருந்திட்டம் மகாவெலியூடாகநடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றமைதெரியவருகிறது. மகாவெலிநீர் வரப்போகின்றதுஎன்று கூறியேஅதன் நீர் கொண்டுசெல்லப்போகும் இடங்கள் வலயங்களாகஅடையாளப்படுத்தப்பட்டன. இன்றுவரைவில் மகாவெலிநீர் ஒருசொட்டேனும் வடமாகாணத்திற்குக் கொண்டுவரப்படவில்லை. தற்போதையநிலையில்வரப்போவதுமில்லை. ஆனால் அதனைச் சாட்டாகவைத்துசிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுவருகின்றன.
குடியேற்றங்களில் மக்களை இருத்தும் போதுஅவ்வூர் மக்களுக்குமுன்னுரிமைவழங்கவேண்டும். அவ்வாறுஎவரும் முன்வராதநிலையில் முதலில் அப் பிரதேசத்திற்கும் பின்னர் மாவட்டத்திற்கும் அதன் பின் மாகாணத்திற்கும் முன்னுரிமைவழங்கப்படவேண்டும்.
இதுவேசர்வதேசரீதியாகஏற்கப்பட்டுள்ளநடைமுறை. தமிழ் மக்கட் தலைவர்களுடன் அரசாங்கம் முன்னர் செய்துகொண்ட (பின்னர் கைவிடப்பட்ட) உடன்பாடுகளில் மாகாணத்தில் தமிழ் மக்கள் முன்வராவிடில் நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்குமுன்னுரிமைவழங்கவேண்டும் என்றுகூட கூறப்பட்டிருந்தது.
இவற்றைஎல்லாம் புறந்தள்ளியேசிறைசென்றுவந்தசிங்களக் குற்றவாளிகளை இவ் விடங்களில் குடியேற்றியதுஅப்போதையஅரசாங்கம். அதாவதுவடகிழக்குமாகாணங்களைப் பிரிக்கநடுவில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்படவேண்டும் என்றகபடநோக்குடனேயேசிங்களத் தலைவர்கள் இது காறும் காய் நகர்த்திவந்துள்ளனர்.
போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளால் மேற்படிசிங்களக் குடியேற்றவாசிகள் விரட்டப்பட்டனர். போர் முடிந்தபின்னர் மகாவெலிஅதிகாரசபைவெலிஓயாசெயற்றிட்டத்தின் கீழ் மணல் ஆறு இருந்த இடங்களில் எல்லாம் மீண்டும் சிங்களக் குடியேற்றங்களைஏற்படுத்தியது. அவர்களின் திட்டம் முல்லைத்தீவு,திருகோணமலை,வவுனியா,அனுராதபுரமாவட்டங்களை இணைப்பதாய் அமைந்தது.
முன்னர் தமிழ் மக்கள் இருந்த இடங்களில் பலவந்தமாகச் சிங்களமக்கள் அரசாங்கத்தால் போருக்குமுன்னர் குடியேற்றப்பட்டார்கள். போர் வரக் காரணங்களில் ஒன்று இவ்வாறானசிங்களக் குடியேற்றங்களே. போரின் போதுசிங்களக் குடியேற்றவாசிகள் விரட்டப்பட்டார்கள். போர் முடிந்ததும் முன்னர் சிங்களவர் வசித்த இடங்களில் நாம் அவர்களைக் குடியிருத்துகின்றோம் என்று கூறிபாரம்பரியமாகஅங்குகுடியிருந்தசிங்களவரைவிடுதலைப் புலிகள் விரட்டியதாகவும் அவர்களைஅரசாங்கம் போர் முடிந்தபின் குடியேற்றுவதாகவும் ஊர் உலகத்திற்குஅறிவித்தேமேற்படிசிங்களகுடியேற்றத்தைவழிநடத்திச் சென்றுகொண்டிருக்கின்றார்கள் அரசாங்கத்தினர்.
தமிழர் வாழ்ந்த இடங்களில் சிங்களமக்களைக் குடியிருத்தி,காணிகொடுத்து, வீடுகட்டப் பணம் கொடுத்து,விசேடஅதிரடிப்படையைக் கொண்டுபாதுகாப்பும் கொடுத்துவருகின்றதுஅரசாங்கம்.
நான்குமாவட்டங்களுக்குஉட்பட்டமகாவெலிசெயற்றிட்டத்தின் நிர்வாகம் அனுராதபுரத்தில் இருந்தேநடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. அதனால்த்தான் மற்றையமாவட்டஅரசாங்கஅதிபர்களுக்கோஅலுவலர்களுக்கோஅங்குஎன்னநடைபெறுகின்றதுஎன்றுதெரிவதில்லை போலும்.
இத் தருணத்தில் மகாவெலிஅதிகாரசபைபற்றியசிலவிளக்கங்களைத் தருவதுபொருத்தமாக இருக்கும் என்றுநினைக்கின்றேன்.
1979ம் ஆண்டில் 23வது சட்ட மூலமாகவேமகாவெலிஅதிகாரசபைஉருவானது. அதன் மூன்றாம் ~ரத்துமுக்கியமானது. ஜனாதிபதியின் ஒப்புதலோடுஉரியஅமைச்சரின் கருத்துப்படிமகாவெலிகங்கையின் நீரைஅல்லதுவேறேதேனும் முக்கியநதியின் நீரைஎங்கெல்லாம் பாவித்துஅங்குமுன்னேற்றம் காணமுடியுமோஅந்த இடத்தைஅவர் வர்த்தமானியில் பிரசுரிப்பதன் மூலம் “விசேடநிலப்பகுதி”என்றுஅதனைப் பிரகடனப்படுத்தலாம். இவ்வாறானபிரகடனம் பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.
சகலசிங்களமக்கள் பிரதிநிதிகளும் அமைச்சரின் இவ்வாறானகருத்தைஏற்கத் தவறமாட்டார்கள். அதன் அடிப்படையில்த்தான் 1988ம் ஆண்டில் ஒருவிசேடவர்த்தமானி மூலம் மகாவலி“டு” வலயம் தாபிக்கப்பட்டது. அதன் பின் 2007ம் ஆண்டில் இன்னொருவர்த்தமானியில் அதுமேலும் விஸ்தரிக்கப்பட்டது.
இது முழுக்க முழுக்க வடக்கையும் கிழக்கையும் பிரிக்குமுகமாகவே மகாவெலி நீரைச் சாட்டி மகாவெலி அதிகாரசபை வடமாகாணக் காணிகளைக் கையேற்றுள்ளது. மணலாறில் தொடங்கி தற்போதுமகாவெலி மூலம் சிங்களபேராதிக்கம் வடமாகாணத்தில் தொடர்கின்றடிதனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ad

ad