புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2018

சிம்பாப்வேயை வென்றது தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா, சிம்பாப்வேக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கிழக்கு இலண்டனில்
நேற்று  இடம்பெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ரஸி வான் டர் டூஸன் 56 (44), டேவிட் மில்லர் 39 (34), பப் டு பிளெஸி 34 (20) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கைல் ஜார்விஸ் 3, கிறிஸ்தோபர் மெபு 2, பிரெண்டன் மவுட்டா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 161 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 17.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களையே பெற்று 34 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், பீற்றர் மூர் 44 (21), பிரெண்டன் மவுட்டா 28 (14), ஷோண் வில்லியம்ஸ் 21 (22), பிரெண்டன் டெய்லர் 19 (23) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இம்ரான் தாஹீர் 5, அன்டிலி பெக்லுவாயோ, ஜூனியர் டலா ஆகியோர் தலா 2, லுங்கி என்கிடி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக இம்ரான் தாஹீர் தெரிவானார்.

ad

ad