புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2018

சபாநாயகரையும் சம்பந்தனையும் துரத்தி துரத்தி தாக்க முயற்சி! சுமந்திரனை தேடி வலை வீச்சு

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அனைவர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன.



நாடாளுமன்றுக்கு மிகவும் மரியாதையுடன் வர வேண்டிய சபாநாயகர் நேற்று பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வருகைத்தந்திருந்தார்.

அது மட்டுமல்லாது அவர் மீது தாக்குதல் நடத்துவதற்கு கடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும் அவரை காப்பாற்றுவதற்காக பொலிஸ் படையினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்ததுடன், அவர்கள் தாக்குதல்களுக்கும் இலக்காகியிருந்தனர்.

இந்த நிலையில் சபைக்குள் வந்த சபாநாயகர் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றி விட்டு சபாநாயகர் வெளியேறிச் சென்றார்.

வெளியே சென்ற சபாநாயகரையும் விடாது துரத்திச் சென்ற ஆளுங்கட்சி எம்.பிக்கள் அவரை தாக்க முயற்சித்துள்ளனர்.

கிடைத்த பொருட்களை எல்லாம் வீசி எறிந்துள்ளனர். இதேவேளை அவ்வழியால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொலிஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டு இருந்தார்.

இதன்போது ஆளும் கட்சி எம்.பிக்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் அவரையும் தாக்குவதற்கு முயற்சித்துள்ளனர்.

பொருட்களைக் கொண்டு சம்பந்தன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனையும் தாக்குவதற்கு அவரை தேடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad