புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2019

ஜனாதிபதியுடன் சந்திப்பு இல்லை - மாணவர்களை அழைத்து ஏமாற்றிய அங்கஜன்

யாழ்.பல்கலைக்கழக மாணவா்கள் விடுதலை தொடா்பாக ஜனாதிபதியை சந்திக்க சென்ற மாணவா்களை சந்திப்பதாக கூறிவிட்டு ஜனாதிபதி ஏமாற்றிவிட்டதாக மாணவா்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும் மாவீரா்களுடைய புகைப்படம் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி யாழ்.பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் தலைவா், செயலாளா்.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குறித்த மாணவா்களுக்கு எதிராக தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றத.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திக்க சென்ற போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் பிறிதொரு நிகழ்வுக்கு சென்றமையினால்
மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர்,செயலர்,மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்
தலைவர், மூத்த உறுப்பினர்களின் படங்களை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்க்ளின் விடுதலை தொடர்பிலேயே ஜனாதிபதிக்கும் மாணவ பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad