புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2020

கொரோனா வைரஸில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ள இத்தாலியின் சிறு நகரம்!

இத்தாலியின் வெனிஸ் நகரத்திலிருந்து 70 கிமீ தூரத்தில் உள்ள சிறு நகரம் வோ. கடந்த பெப்ரவரி மாதம் 21-ஆம் திகதி இத்தாலியின் முதல் கொரோனா தொற்று வோ-வில் வசித்த நபருக்கு உறுதி செய்யப்பட்ட போது உலகமே அந்த நகரத்தை உற்று நோக்கியது.
தற்போது இத்தாலியில் உயிரிழப்பு 7500-ஐ தாண்டிய நிலையில் வோ வில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை, மேலும் அங்கு கொரோனாவால் உயிரிழப்புகளும் இல்லை.
இதனை எப்படி சாத்தியப்படுத்தியது வோ நகரம் என்ற கேள்விக்கு அது குறித்த ரகசியத்தை சொல்கிறார்கள் வோ நகரவாசிகள்.
முதலாவது தனிமைப்படுத்துவது. இரண்டாவது எல்லோரையும் பரிசோதனை செய்வது. பெப்ரவரி 21-ஆம் திகதி தங்கள் நகரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்த வோ நகரவாசிகள், 23-ஆம் திகதி நகரத்தை முற்றிலுமாக மூடினர்.
நகருக்குள் யாரும் வரவோ, நகரிலிருந்து யாரும் வெளியேறவோ அனுமதி மறுக்கப்பட்டது. மருந்து மற்றும் மளிகைப் பொருட்கள் மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. 3000 குடும்பங்கள் கொண்ட அந்த நகரில் வசித்தவர்கள் அத்தனை பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ad

ad