புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2020

பிரபல மிருதங்கக் கலைஞர் கந்தையா ஆனந்த நடேசன் கொரோனா தொற்றால் பலி

யாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்த நடேசன் (வயது 59) கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நேற்று வியாழக்கிழமை லண்டனில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பெண் பிள்ளைகள் இருவரின் தந்தையான இவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை பிறப்பிடமாவும் புலம் பெயர்ந்து லண்டனில் கென்டன், கரோ நகரை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

மகாஜனக் கல்லூரியின் பழையமாணவனும் (1979 உயர்தரப் பிரிவு)
மகாஜனக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியை கந்தையா ஆசிரியையின் மகனுமாகிய ஆனந்தநடேசன் 16.4.2020 அன்று லண்டனில் கொரோரனா தொற்றுக்கு இலக்காகி மரணமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிராரத்திக்கிறோம்

கடந்த 17 நாட்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த அவர் கடந்த சில நாட்களாக கோமா நிலையில் காணப்பட்டதாகவும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் லண்டனில் வாழ்கின்ற அவருடைய சக நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் மிக மூத்த பிரபல்யமான மிருதங்கக் கலைஞர் க.ப.சின்னராசா அவர்களின் மாணவரான ஆனந்தநடேசன், லண்டனில் மிகப் பிரபல்யமான மிருதங்கக் கலைஞராக விளங்கியிருக்கின்றார்.

ஆனந்தலயா மிருதங்கப் பள்ளி என்கிற இசைக் கல்லூரியை லண்டனில் நிறுவி பல நூற்றுக்கணக்கான மிருதங்கக் கலைஞர்களை வளர்த்தெடுத்த அவர் பெருமளவான மாணவர்களின் மிருதங்க அரங்கேற்றத்தினையும் நிகழ்த்தியிருக்கின்றார்.


லண்டனில் வாழ்ந்து வந்த மிகச்சிறந்த மிருதங்கக்கலைஞரின் இழப்பு கலைத் துறைக்கு பாரிய இழப்பாகும்.

ad

ad