புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2021

ரசியல் கைதிகள் விவகாரம் - நாளை கலந்துரையாடல்

www.pungudutivuswiss.com
ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம்' எனும் தொனிப்பொருளில் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பினரால், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக சர்வமத தரப்பினருடனான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம்' எனும் தொனிப்பொருளில் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பினரால், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக சர்வமத தரப்பினருடனான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறை இருட்டில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தற்கால கொரோனா வைரஸ் தொற்றும் வெகுவாக பாதித்துவரும் நிலையில், கருணை அடிப்படையில் இத்தருணத்திலாவது, அவர்களை விடுவிக்க மனிதாபிமான முறையில் வலியுறுத்தும் வகையில், சர்வமத பிரதிநிதிகளுடன் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், யாழ். மாவட்டத்தில் உள்ள சர்வமத பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கமைய, இந்தக் கலந்துரையாடல், யாழ். – நாவலர் வீதியில் உள்ள தியாகி அறக்கட்டளை நிலைய மண்டபத்தில், நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

ad

ad