அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை ஊக்கப்படுத்த அமெரிக்க மீண்டும் பேரவையில் இணைவதாகவும் அவர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டு உரையற்றும் போதே அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
உலக நாடுகளின் மனித உரிமைகளை ஊக்கப்படுத்துவதிலும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதிலும் அமெரிக்கா நீண்ட ஈடுப்பாடுட்டுடன் செயற்பட்டுள்ளது. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் இணைந்து அந்த பணிகளை ஊக்கப்படுத்த அமெரிக்க ஆர்வத்துடன் உள்ளது.
பல நாடுகளினதும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அடிப்படை தன்மையை வலியுறுத்தி நிற்கின்றோம். மேலும் பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படை தன்மையை வலியுறுத்துவதோடு மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு அமெரிக்க முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.