கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞன் பலி! [Friday 2025-09-19 07:00] |
![]() பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். கிளிநொச்சி அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் நோக்கி பயணித்த பேருந்திலிந்து நேற்று இரவு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார். |
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். |
-
19 செப்., 2025
www.pungudutivuswiss.com