வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/28 கிராம சேவகர் பிரிவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/169 கிராம சேவகர் பிரிவில் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். |