நரேந்திரமோடி வலிமையான தலைவர்; திறமையான நிர்வாகி: ரஜினி பேட்டி சென்னையில் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தல் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம்
-
13 ஏப்., 2014
திருமலை மாணவர் கொலைக்கு பொறுப்புக் கூறுமாறு போராட்டம்; நியூயோர்க்கில் சர்வதேச மன்னிப்புச் சபை முன்னெடுப்பு
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்திச் சர்வதேச மன்னிப்புச் சபையின் இளைஞர்
வடக்கு இருதய சத்திர சிகிச்சை பிரிவு ஆரம்பம்
வடக்கு இருதய சத்திர சிகிச்சை பிரிவின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வடக்கு முதலமைச்சரை சந்திக்க இன்னும் ஆவல்; அமைச்சர் பசில் கூறுகிறார்
வடக்கு அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்தர்ப்பம் கோரிய நிலையில் முதலமைச்சர் அதனை நிராகரித்திருந்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம்
பிறக்கின்ற புதுவருடத்தில் உலக சமாதானம் வேண்டி ஆன்மீகப் பேரணி
பிறக்கின்ற புதுவருடத்தில் உலக சமாதானமும், சீரான பருவ மழையையும் வேண்டி ஆன்மீகப் பேரணியொன்று இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.சத்திரச் சந்தி ஞானவைரவர் ஆலயத்தில்
ஐ.நாவுடனான உடன்பாட்டை மதிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறார் பான் கீ மூனின் பேச்சாளர்
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009 ஆம் ஆண்டு மேற்கொண்ட உடன்பாட்டை இலங்கை அரசு மதிக்கவேண்டும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின்
12 ஏப்., 2014
நெடுங்கேணியில் கொல்லப்பட்ட தேவிகன் அனுராதபுர, கொலன்னாவ தாக்குதல்களில் பங்கெடுத்த வான்புலி 
நெடுங்கேணியில் நேற்று நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக சிறிலங்காப் படையினரால் அறிவிக்கப்பட்ட மூன்று பேரில், தேவிகன் என்பவர், விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பின் முக்கியமான விமானி என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். நெடுங்கேணிக்குத் தெற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள வெடிவைத்தகல்லு என்ற இடத்தில், நேற்று அதிகாலையில். நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர் கொடுக்க முனைந்தவர்கள் என்று கூறி, கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரையும் சிறிலங்காப் படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்கள் மூவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்னர் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் வான்புலிகளின் விமானியான தேவிகன், 2007ம் ஆண்டு நடத்தப்பட்ட அனுராதபுர வான்படைத்தளம் மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் குதம் என்பனவற்றின் மீதான வான் தாக்குதல்களில் பங்கெடுத்தவர் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். 1995ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்ட ராதா படையணியைச் சேர்ந்த கரும்புலியான தேவிகன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும் இருந்தவர். போரின் முடிவில் இந்தியாவுக்குத் தப்பிச்சென்ற இவர், பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் சென்றதாகவும், அங்கிருந்து அண்மையில் சிறிலங்கா திரும்பியிருந்த்தாகவும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஏனைய இருவரான கோபி மற்றும் அப்பன் ஆகியொர், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கோபி போரின் முடிவில் சிறிலங்காப் படையினரால் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர், சவூதி அரேபியாவுக்குச் சென்று சாரதியாகப் பணியாற்றியவர் என்றும், அங்கிருந்த ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று திரும்பியவர் என்றும் அவர் கூறியுள்ளார். நேற்றைய தேடுதல் நடவடிக்கைக்காக சுமார் 2000 சிறிலங்காப் படையினர் நெடுங்கேணிக்குத் தெற்கிலுள்ள காட்டுப் பகுதியில் குவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)