புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014

வடக்கு முதலமைச்சரை சந்திக்க இன்னும் ஆவல்; அமைச்சர் பசில் கூறுகிறார் 
வடக்கு அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­ச சந்தர்ப்பம் கோரிய நிலையில் முதலமைச்சர் அதனை நிராகரித்திருந்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம்
வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் கூறுகையில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் நான் நாட்டின் அனைத்து மாகாணங்களினதும் முதலமைச்சர்களுடன் தொடர்புகளை பேணி வருகின்றேன்.
 
அந்த வகையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசுவதற்கு முயற்சித்தேன். ஆனால் அவர் அதற்குச் சந்தர்ப்பம் வழங்கவில்லை.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்புபடாவிடினும் இந்திய வீட்டுத்திட்டம் விடயத்தில் சில தொடர்புகள் உள்ளன.
 
எனவே அவ்வாறான விடயங்கள் குறித்து வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடும் தேவை உள்ளது. அவர் தற்போது சந்தித்துப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்காவிடினும் முதலமைச்சருடனான சந்திப்பு தொடர்பில் நான் இன்னும் எதிர்பார்ப்பை கைவிடவில்லை. விரைவில் அவருடன் சந்திப்பை மேற்கொள்ள முடியும் என்று நம்புகின்றேன் என்றார். 

ad

ad