புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2014





நரேந்திர மோடி முதற்கட்ட பிரசாரத்துக்கு நாளை சென்னை வருகிறார்- ரஜினிகாந்துடன் சந்திப்பு

நரேந்திர மோடி முதற்கட்ட பிரசாரத்துக்கு நாளை சென்னை வருகிறார்.மீனம்பாக்கத்தில் நடக் கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். முன்னதாக சென்னை வரும் நரேந்திரமோடிக்கு
உற்சாக வரவேற்பு கொடுக்க தமிழக பாரதீய ஜனதா நிர்வாகி கள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
சென்னை விமான நிலை யத்தில் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் நரேந்திரமோடி, விமான நிலைய ஓய்வறையில் பாரதீய ஜனதா நிர்வாகிகளுடன் தேர்தல் பிரசார பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.
அப்போது தமிழகத்தில் உள்ள தனது நீண்டநாள் நண்பர்களையும் அவர் சந்தித்து பேச முடிவு செய் துள்ளார். அதன்படி மோடியின் நட்பு வட்டாரத்தில் இருக்கும் நடிகர் ரஜினியும் சந்தித்து பேச உள்ளார். இது மரியாதை  நிமித்தமான சந்திப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா வேடபாளர் நரேந்திர மோடி நாளை இரவு 7 மணிக்கு தென் சென்னை பாரதீய ஜனதா வேட்பாளர் இல.கணேசனை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் மத்திய சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் ரவீந்திரன், வடசென்னை தே.மு. தி.க. வேட்பாளர் சவுந்திர பாண்டியன், ஸ்ரீபெரும்புதூர் ம.தி.மு.க. வேட்பாளர் மாசிலாமணி, காஞ்சீபுரம் ம.தி.மு.க. வேட்பாளர் மல்லை சத்யா, திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜ் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு இரவே குஜராத் புறப்பட்டு செல்கிறார்.
2-ம் கட்டமாக 16-ந்தேதி மற்றும் 17-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் சூறா வளி பிரசாரம் பாரதீய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டுகிறார். 16-ந்தேதி (புதன்கிழமை) கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய 3 இடங்களில் நடைபெறும் பிரசாரபொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
கிருஷ்ணகிரியில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணி, தர்மபுரியில் போட்டியிடும் டாக்டர் அன்புமணி ஆகி யோரை ஆதரித்து பேசுகிறா
ர்.
சேலத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசுக்கு ஆதரவு திரட்டுகிறார். ஈரோட்டில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்தியை ஆதரித்து பேசுகிறார்.
17-ந்தேதி (வியாழன்), நாகர்கோவிலில் பாஜனதா வேட்பாளர் பொன்.ராதா கிருஷ்ணனை ஆதரித்து நடைபெறும் பிரசார கூட் டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்பட பக் கத்து மாவட்டங்களில் போட்டியிடும் பாரதீய ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர் களை ஆதரித்து பேசுகிறார்.
அன்றைய தினமே சிவகங்கையில் எச்.ராஜாவை யும்,  கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணனையும் ஆதரித்து பேசுகிறார்.

ad

ad