தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம்
-
16 அக்., 2020
மணிவண்ணன், மயூரனைமாநகர சபையில் நீக்க கோரியது முன்னணி. மணிவண்ணன் இல்லாத முன்னணி உரூப்படுமா _
Jaffna Editorயாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
ரிசாத்தை தேடி சஜித் வீட்டிற்கு சென்ற சிஐடியினர்
Jaffna Editorமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிஐடியினர் அவரை தேடி எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ராஜகிரியவில் உள்ள எதிர்கட்சி தலைவரின் ரோயல் கார்டன் இல்லத்திற்கு சிஐடியினர் சென்றுள்ளனர்
15 அக்., 2020
14 அக்., 2020
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றி
Jaffna Editor: ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்தது
Fஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
யாழில் ஐந்நூறு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் -அரசாங்க அதிபர்
Jaffna Editor
யாழ்ப்பாணத்தில் இதுவரை 501 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 98 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடம்
அ.ம.மு.க. கட்சியின் பொருளாளராக வெற்றிவேல் இருந்து வருகிறார். கட்சி பணியில் தீவிரமாக இருந்த அவருக்கு, கடந்த 6-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சென்னை போரூரில் உள்ள தனியார்
உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா!
கம்பஹா – திவுலபிடிய ஞானோதய வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
புங்குடுதீவு . இப்போதைய நிலை
----------------------------------------------------
11 ஆம் 12 ஆம் வடடாரங்களில் சுமார் 41 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்
கொழும்பு நாரகன்பிட்டிய ஆடை தொழில் சாலையில் பணியாற்றிய பெண் ஒருவர் புங்குடுதீவுக்கு சென்றதையடுத்து புங்குடுதீவு முடக்கப்பட்டது . இவரது வீட்டுக்கு அண்மிய பகுதிகளான 11 ஆம் 12 ஆம் வடடாரங்களை சேர்ந்த சுமார் 41 குடும்பங்களை சேர்ந்த 160 பேர் வாணர் அரங்கடியை சூழ்ந்த 11 ஆம் 12 ஆம் வடடாரங்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன ர் ஊருக்கு சென்ற பெண் அங்கெ ஒரு பிறந்த நாள் விழாவிலும் பங்குபற்றியமை மேலும் பலரை தொடர்புக்குள்ளாகியிருந்தது மடத்துவெளி பழையதுறையில் போலீசார் கடடற்படையினர் அரச நிர்வாக பிரிவுகள் சுகாதார பிரிவு என முகாமிட்டுள்ளனர் .புங்குடுதீவு மக்கள் எவரும் வெளியே செல்லவோ உள்ளே செல்லவோ அனுமதி இல்லை . புங்குடுதீவுக்கு வெளியே உள்ள உறவினர்கள் உள்ளே முடக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப்பொருட்களை வழங்க விரும்பினால் பாளையத்துறைக்கு சென்று பொருட்களை வழங்கலாம் மறுபக்கத்தில் உறவினர் வந்து எடுத்து செல்வர் இது போன்றே கடை முதலாளிகள் யாழ் நகரில் இருந்து பொருட்களை வாகனங் களில் எடுத்துவர அழைப்பு விடுத்து இதே இடத்தில வந்து எடுத்து செல்கின்றனர் .குறிகாட்டுவானில் நெடுந்தீவு நயினாதீவு மக்கள் யாழ்நகர் செல்ல பேரூந்துகள் குறிப்பிட நேரங்களில் மட்டும் ஒழுங்கு செய்யப்ப ட்டுள்ளன. கொரோன பரிசோதனைக்குப்படுத்தப்படட 15 பேரின் முடிவுகளில் 12 கிடைக்கப்பெற்றுள்ளன, தொற்று இல்லை என உறுதி படுத்தப்பட்டுள்ளது அனைத்து முடிவுகளும் கிடைத்த பின்னர் அடுத்து வரும் நாட்களில் முடக்கம் நீக்கப்படுமா அல்லது இன்னும் 1 வாரத்துக்கு மேலாக நீடிக்கப்படுமா என முடிவாகும்
அரச அதிபருடன் தமிழ்தேசியகூட்டமைப்பு குழு சந்திப்பு!!
Jaffna Editor
மட்டக்களப்புமாவட்ட அரச அதிபருடன் தமிழ்தேசியகூட்டமைப்பு குழு நேற்று(13/10/2020) மு.ப 9.30, மணிக்கு சந்திப்பு ஒன்றை நடத்தினர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறி
13 அக்., 2020
ரியாஜ் பதியுதீன் மீதான விசாரணையை நிறுத்தியமை நியாயமற்றது; சட்டமா அதிபர் அதிரடி அறிவிப்பு
Jaffna Editor
ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நிறுத்தியமை நியாயமற்றது என சட்டமா திபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
கொல்கத்தாவை பந்தாடியது கோலியின் அணி
Jaffna Editor
நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர்லீக் தொடரின் நேற்று (12)நடைபெற்ற போட்டியி விராட் கோலி தலைமையிலான தலைமையிலானபெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது
20 ஐ தோற்கடியுங்கள் -திடீரென கிளர்ந்தெழுந்துள்ள பௌத்த பீடங்கள்
Jaffna Editor
கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் கொண்டுவரும் இருபதாவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக இரண்டு பௌத்த மதபீடங்கள் திடீரென தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையானது கொழும்பு
அத்துமீறி நில அபகரிப்பதை தடுப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றம்
Jaffna Editor
மட்டக்களப்பு மயிலந்தனமடு-மாதவனை பகுதியில் கால் நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரை காணிகளை வெளி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களும், புத்தபிக்குகள்
8 அக்., 2020
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் திங்கள் முதல் முகக்கவசம்
பேர்ண் மாநிலமெங்கும் எதிர்வரும் திங்கள்முதல் பெரும்பாலான இடங்கள் எங்கும் முகக்கவசம் அணிதல் கடடாயமாக்கப்படுள்ளது , தொடரூந்து நிலையம் , தபாலகம், தேவாலயங்கள் , கடைகள் , பொருடகாட்சியகம் அரங்கம் ஆகிய இடங்களில் அணிதல் வேண்டும். ஆகக்கூடியது 300 பேர் உள்ளடங்கிய உணவகங்கள் பார்கள் கிளப்புக்கள் எங்கும் இருக்கைகளில் மட்டுமே விருந்தினர் அனுமதிக்கப்பட்டல் வேண்டும் . ஸுக் மாநிலத்தில் கடைகள் எங்கும் அணிதல் வேண்டும் சுவிஸ் உதைபந்தாடட வீரர்கள் சகிரி அக்கஞ்சி ஆகியோருக்கு கொரோனா தோற்று கண்டுள்ளது . இன்று 20.45 க்கு க்ரோசிய அணியை எதிர்த்து சென்காலனில் நடப்பு போட்டியில் ஆடுகிறது சுவிஸ் அணி ,
7 அக்., 2020
Breaking News ----------------- அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டி
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது.
கூட்டமைப்பு; பேச்சாளர் பதவிக்கு பிரேரிக்கப்பட்ட இரண்டு பெயர்கள்!
இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பார் என கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ள
5 அக்., 2020
புங்குடுதீவு உறவுகளே .சற்றே செவிமடுங்கள் இந்த பதிவை .
----------------------------------------------------------------------------------------------
தாயகத்தில் தீவகம் மற்றும் எமது தாயநிலம் புங்குடுதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புகளினதும் சமூக ஆர்வலர்களினதும் ஒட்டுமொத்த வேண்டுகோள் ஒலிப்பதிவினை அதன் சாராம்சத்தை தொகுத்து வழங்குகிறோம் . எல்லா சமூக வலைத்தளங்களும் எல்லோருக்கும் பொதுவானவை .யாரும் பார்க்கலாம் யாரும் விமர்சனம் செய்யலாம் .எமது ஊரின் ரூபன் சர்மாவின் சம்பவத்தையடுத்து வித்யாவின் கொலைக்கு பின்னர் போன்றே ஊரின் புகழுக்கு களங்கம் விளைவிக்க சில புலம்பெயர் தேசத்து எங்களூரை சேர்ந்த கனவான்களே கோடரிக்காம்புகளாக வழி சமைத்து வேடிக்கை பார்க்கின்றனர் . புங்குடுதீவு மக்கள் புலம்பெயர் காலத்துக்கு முன்பிருந்தே கல்வி வர்த்தகம் ஆன்மிகம் என்று எமது ஊரில் மட்டுமல்ல இலங்கை முழுவதும் புகழோடு வாழ்ந்து காட்டியவர்கள். இதனால் மற்ற ஊறவர்களுக்கு எமது தாயநிலைத்தை பற்றி இயல்பாகவே பொறாமையும் கிண்டலும் கொள்வது உண்டு .புலத்து தேசங்களிலும் இது தொடர்கிறது .இன்றைய நவீன கலாசார பிறழ்வு கொண்ட யுகத்தில் இது போன்ற சம்பவங்கள் எல்லா ஊர்களிலும் இடம்பெறுவது வழமை . ஆனால் எங்கள் மண்ணில் நடக்கும்போது இன்னொருமுறை இது போன்று நடவாதிருக்க எம்மால் உச்சக்கடட எதிர் வினையாற்றலில் ஈடுபடுகிறோம் ஏனெனில் எமக்கு அதற்கான ஆளணி பொருளாதார உலக ரீதியான வலைப்பின்னல் தொடர்பாடல் சக்திகள் நிறையவே இருப்பது தான். மற்ற ஊரவர்கள் இதுவும் கடந்து போகும் என்று போய்க்கொண்டே இருப்பார்கள் .
ரூபன் சர்மாவின் சம்பவத்தையடுத்து காவல் துறை தன் கடமையை ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறது .விசாரணை செய்கிறது .சந்தேகநபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள் சட் டப்படி இந்த உறுதியான செய்திகளை மட்டும் வேண்டுமானால் எழுதுவதே பதிவிடுவதோ தான் தர்மம் .இதனை விடுத்து புலம் பெயர் தேசத்தில் வாழும் எமது ஊரை சேர்ந்த ஒரு சிலர் தங்கள் எண்ணப்படி முகநூல் விளம்பரத்துக்காகவோ இணைய பரம்பலுக்காகவோ பழைய புராணங்கள் கற்பனை கதைகளை இங்கே சேர்த்து தமக்கு வேண்டப்படாதவர்களையோ அல்லது அமைப்புகளையோ இழுத்து வைத்து எழுதி குளிர் காய்கிறார்கள் உண்மையில் தாய் மண்ணை உயிராக நேசிக்கும் ஒவ்வொரு புங்குடுதீவு மனிதனும் ஊரை தனது சொந்த தாயாகவே மதிக்கிறான் ஊரில் குற்றங்கள் உருவாக அங்கே உள்ள மதுபானசாலை பெரிய காரணமாகும் .தீவகத்திலேயே இங்கே தான் இந்த மதுபானசாலையை எண்பதுகளில் திறந்துள்ளார்கள் . கூர்ந்து கவனியுங்கள் முக்கியமாக இப்படி பிறந்த ஊரையே கேவலமான பழிக்கும் பதிவிடுவோர் வாழ்வில் வசதியாக புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டு ஊருக்காக ஒரு சதமும் ஈயாத பிறவிகள் . ஊருக்கான எந்த செயல்பாட்டிலும் ஈடுபாடு காடடாதவர்களே இவர்கள் முடிந்தால் அதனை பதிவி டச்சொல்லுங்கள் மற்றவர்கள் அமைப்புக்கள் செய்வதை கண்டு மனம் புழுங்கி தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் பிரான்சில் இருந்து ஒரு ஊரின் உறவுக்கு இதுவே தொழில் .இவரின் எழுத்துக்களை கவனித்தால் வேற்று ஊரவன் இவர் எதோ ஊருக்கு வெட்டிக்கிழிக்கிறார் போல அது தான் இப்படி விமர்சனம் செய்கிறார் என்று ஊகிப்பார்கள் .இவர் தனது பதிவுகளை சமூக வலை தளங்களில் இடு வதோடு அவற்றை இலங்கையின் மக்களுக்கு பொதுவான கட்சி, சமூக சேவை அமைப்புக்கள், ஊர் அமைப்புக்கள் என்றெல்ல்லாம் தேடி தேடி அந்த தளங்களிலும் குழு நிலை தளங்களிலும் பதிவிட்டு கேவலப்படுத்துகிறார் இவரின் பதிவை கண்டு அவர்களும் நக்கலும் கிண்டலும் மிக்க விமர்சனங்களை(comments ) பதிவேற்றுகிறார்கள் ஏன் எங்கள் ஊரை சேர்ந்தவர்களே மீள்பதிவிடுகிறார்கள் . அங்கே இருக்கும் உள்விஷயங்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகளை விளங்கிக்கொள்ளாமல் மேலெழுந்த வாரியாக பார்த்து செய்வது வேதனை அளிக்கிறது .எங்கள் ஊரை பெண்களை வரட்சியை கேவலப்படுத்துவதை பார்த்துக்கொண்டிருக்கவா போகிறீர்கள் .எங்கள் சகோதரிகளின் பண்புகளுக்கு களங்கம் விளைவிக்க துணை போகாதீர்கள் புலம்பெயர் புங்குடுதீவு மக்களும் ஊரின் மக்களும் பரஸ்பரம் ஆதரவுக்கரங்களுடனும் நண்றிகரங்களுடனும் பின்னி பிணைந்து வாழ்கிறார்கள் அண்மைய கொரோனா காலத்து நிவாரண பங்களிப்பே நல்ல சாட்சி இலங்கையில் எந்த ஊர் மக்களுக்கும் கிடைக்காதளவு தாராளமய பொருட்களும் பணமும் கூட கிடைத்தது மறக்க முடியாதது .அன்பு உறவுகளே நாங்கள் எங்கள் ஊரின் நல்லது கெட்டதுகளை நாங்களே உள்வாங்குவோம் நாங்களே ஆலோசிப்போம் நாங்களே தீர்த்துக்கொள்வோம் .அந்நியனுக்கு இங்கே வேலை இல்லை .புங்குடுதீவு பல வரலாற்றுப் பெருமை கொண்ட ஊர் .இப்போதும் நாங்கள் அவ்வாறே பேணிப்பாதுகாப்போம் புலத்தாரும் ஊராரும் என்றும் போலவே கை கோர்த்து உறாவிடி மகிழ்வோம் இது போன்ற ஈனப்பிறவிகளை இனம் கண்டு பகிஸ்கரியுங்கள் நன்றி எங்கள் ஊரவன் மட்டும் கண்ணியமாக நாகரீகமாக விமர்சனம் எழுதுங்கள்
4 அக்., 2020
என் நினைவுகளில் இருந்து ரூபன் சர்மா ----
---------------------------------------------------------------
இரு வருடங்களின் முன் என்னால் முன்னெடுக்கப்பட மடத்துவெளி - ஊரதீவு கேரதீவு வீதி மின்விளக்கு பொருத்தும் பணியை நானும் என் நண்பர்களும் கேட்டுக் கொண்டபடி 5 நாட்களாக கடும் வெய்யில் காலத்திலும் கஷடம் பாராது பிரதேச சபை ஊழியர்களோடு நின்று உதவி உபசரித்து முழுமையாக என் திட் டத்தை நிறைவேற்றி தந்து வைத்த நல்ல உள்ளம், 85 மின்விளக்குகளை பிரதேச சபை ஊழியர்களின் நேர ஒழுங்கின்படி அவர்கள் வரும்போது ஓடிச்சென்று ஒத்துழைத்த உங்கள் சேவையை இக்கணம் என் மனதில் நிறுத்தி பா ர்க்கிறேன் .கடந்த வருடம் ஏப்ரலில் ஊரதீவு சனசமூக நிலையத்துக்கு நான் கட்டிக் கொடுத்த சுற்றுமதில் நுழைவாயில் திறப்பு விழாவின் போதும் கெளரவ விருந்தினராக வந்து என்னையம் கௌரவித்து சிறப்பித்தீர்கள் . புலம்பெயர் தேசத்தில் நாம் முன்னெடுத்து செய்து கொண்டிருக்கும் பாணாவிடையான் ராஜகோபுர மற்றும் ஆலய திருப்பணியில் கூட பூசகர் என்ற நிலையில் நின்று விடாது பல்வேறு காலக்கட்டத்திலும் எம்மை உற்சாகப்படுத்தி உறவுகளை ஊக்குவித்து அடிக்கடி அவர்களின் ஆதரவை வேண்டி நீங்கள் செய்து கொண்டிருந்த பிரசாரப்பலம் 90 வீதம் நாம் முடித்திருக்கும் திருப்பணிப் பாதைக்கு உரமூட்டியது என்பதையும் நாம் மறவோம் . ஊரின் பசுவதை குற்றங்களை களைய வேண்டிய நீங்கள் எடுத்த துணிச்சலான செயல்பாட் டையும் தருணத்தில் நினைவு கூறுகின்றோம் . பானாவிடையான் அருளோடு உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் சாந்தி சாந்தி சாந்தி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)