ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, மன்னார் மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் குறித்த
டெலோ அமை;பபிலிருந்தான தனது 40 வருட அங்கத்துவத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று ராஜினாமா செய்ததன் மூலம் இழந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் டெலோ அமைப்பின் தலைவர் சிறீகாந்தா அலுவலகத்தில் தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை துறப்பது தொடர்பான கடிதத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் கையளித்துள்ளார்.
இதன் மூலம் தான் கட்சி பின்னணி ஏதுமற்ற வேட்பாளராகியிருப்பதாக தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் தனக்கு ஒட் மொத்த தமிழ் மக்களும் வாக்களிக்க அழைப்பும் விடுத்துள்ளார்.