-
19 ஆக., 2024
சுமந்திரன் ஒருபுறம் கஜேந்திரன் மறுபுறம் எதிர்பிரச்சாரங்கள் மத்தியிலும் திரண்ட மக்கள்!
அரியநேத்திரனுக்கு தடை - சிங்கள வேட்பாளர்கள் பக்கம் சாய்கிறது தமிழரசு
![]() பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் அவர்களுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை எனத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
18 ஆக., 2024
மொட்டை அழித்து விட்டார் ரணில்!
![]() ராஜபக்ச குடும்பத்தின் மீதுள்ள ஊழல், மோசடிக் குற்றங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேதான் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி ஆக்கினார்கள். ஆனால் இறுதியில் ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுன கட்சியையும் நாசமாக்கி விட்டார். பொதுஜன பெரமுன கட்சியைத் தற்பொழுது காப்பாற்றிக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ தன் மகனை ஜனாதிபதிப் போட்டியில் களமிறக்கியுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியைப் பாதுகாப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். |
தந்தை செல்வாவுக்கு அஞ்சலி செலுத்திய பின் பிரசாரத்தை தொடங்கினார் அரியநேத்திரன்
![]() தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் இன்றையதினம் தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். |
|
17 ஆக., 2024
34 கட்சிகளின் பிரமுகர்களுடன் ரணில் உடன்படிக்கை
![]() 34 அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் இன்று முற்பகல் 10.06 சுப நேரத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டார். |
15 ஆக., 2024
எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் ரணில்!
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார் |
சங்கு சின்னத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்!
![]() ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுகின்ற பா.அரியநேத்திரனுக்கு 'சங்கு' சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. |
கை கொடுத்தார் ரணில் - கும்பிட்டார் சஜித்!
![]() தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணி இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி பகல் 11 மணியுடன் நிறைவடைந்தது |
14 ஆக., 2024
திருடனின் முகமூடி கழன்றது - சிசிடிவியில் சிக்கினான்!
![]() யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான CCTV காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர் |
சஜித்துடன் 27 கட்சிகள் உடன்படிக்கை!
![]() எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக 27 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர் |
36 வேட்பாளர்கள் கட்டுப்பணம்!
![]() ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது |
9 ஆக., 2024
கொக்குத்தொடுவாய் புதைகுழி- இலக்கத்தகடுகளை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை
![]() முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படுள்ளது |
7 ஆக., 2024
சஜித் - தயாசிறி புரிந்துணர்வு ஒப்பந்தம்!
![]() ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அணி ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளது |
வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை!
![]() வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது |
19 இந்திய மீனவர்கள் விடுதலை- படகோட்டிகளுக்கு தலா 40 இலட்சம் ரூபா தண்டம்
![]() 31 இந்திய மீனவர்களுக்கு எதிரான வழக்கு 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஜூன் 22ஆம் திகதி 3 படகுகளில் எல்லை தாண்டி வந்து கைதான 22 மீனவர்களில் 19 பேர், ஆறு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் |