-
29 செப்., 2025
படகில் சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட 50 புலம்பெயர்ந்தோர்..
புலம்பெயர்வோர் படகு ஒன்றில் பயணித்தவர்களில் 50 பேரை சித்திரவதை செய்து ஆட்கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி எறிந்துள்ள சம்பவமொன்று
28 செப்., 2025
27 செப்., 2025
தவெக பரப்புரை | கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் உயிரிழப்பு? சோகத்தில் மூழ்கிய கரூர்!
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை, கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கிய தவெக தலைவர் விஜய், அதன் தொடர்ச்சியாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரண்டு மாவட்டங்களில் பரப்புரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரையை முடித்துக்கொண்டு கரூருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எனினும், அவரைக் காண்பதற்காக தொண்டர்கள் கூட்டம் ஆரம்பம் முதலே அலைமோதியது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மேடையில் பேசிக் கொண்டிருந்த தவெக தலைவர் விஜய், உடனே பேச்சை நிறுத்திவிட்டு கீழே நடக்கும் நிலை குறித்து விசாரித்தார். அப்போது தொண்டர்கள் தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களைத் தூக்கி வீசினார். பின்னர் மயக்கம் அடைந்தவர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வரச் செய்வதற்கு உத்தரவிட்டார்.

பின்னர் ஆம்புலன்ஸ் வந்த நிலையில், மறுபுறம் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். ஆனால், தொண்டர்களின் தள்ளுமுள்ளு காரணமாக, ஆம்புலன்ஸ் விரைந்து செல்வதிலும் கால தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், விஜய் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். பின்னர், ஒருவழியாக ஆம்புலன்ஸ் சென்ற நிலையில், தன்னுடைய பேச்சைத் தொடர்ந்து பேசி முடித்தார். இறுதியில் குழந்தை ஒன்று காணாமல் போனதாக அறிவித்துவிட்டு பரப்புரை பேருந்தில் இருந்து கீழே இறங்கினார். இதற்கிடையே பரப்புரையில் சிக்கி மயக்கம் ஏற்பட்ட பலரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக, பரப்புரை நடந்த இடத்தில் கூட்டம் கலைந்தபிறகு தள்ளுமுள்ளுவால் பலரும் கீழே மயக்கமடைந்தனர். இதனால் தவெகவின் பரப்புரை நடைபெற்ற இடமே களேபரமானது. இதையடுத்து ஆம்புலன்ஸ்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் பெண்களும் கரூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே உள்ளனர். கூட்டம் கரூர் மருத்துவமனையில் அலைமோதுவதால் அங்கு துயரமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிருக்குப் போராடுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அதில் 29 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தமிழக ,முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 27, 2025
கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி,
முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் - மாவட்ட…
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் @Anbil_Mahesh அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்கள்! ![]() [Friday 2025-09-26 17:00] |
![]() “தியாக தீபம்” திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டது |
காற்றாலை வாகனங்களை தடுத்த மக்கள் மீது பொலிஸ் தாக்குதல்- பலர் படுகாயம்! [Saturday 2025-09-27 08:00] |
![]() மன்னாரில் நேற்று இரவு 10 மணி முதல் காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில், பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலர் காயமடைந்திருக்கின்றனர். |
பிரசவத்தின் போது வலிப்பு - இரட்டைக்குழந்தைகளும் தாயாரும் மரணம்! [Saturday 2025-09-27 08:00] |
![]() யாழ். போதனா வைத்தியசாலையில் இரட்டை சிசுக்கள் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவித்த போது உயிரிழந்த நிலையில் மயக்கமடைந்த நிலையில் இருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் |
26 செப்., 2025
மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்!முதல் 10 இடங்களில் இலங்கை [Thursday 2025-09-25 03:00] |
![]() மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது. |
சம்பத் மனம்பேரியின் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணம்
பரபரப்பான விண்வெளி போர்: ஜெர்மனி இராணுவ செயற்கைக்கோள்களைத் துரத்தும் ரஷ்யா!

விண்வெளியில் போர் மூளுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தும்
நேட்டோ படைகளுக்கு சவால் விடுத்த ரஷ்ய வீரர்கள்: எஸ்டோனிய வான்வெளியில் பதற்றம்! Posted by By tamil

எஸ்டோனிய வான்வெளியில் ரஷ்ய போர் விமானங்க