புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2012


-பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்விற்கு சுவிஸில் இருந்து பாரிசிற்கபேருந்துநாளை பாரிசில் நடைபெற இருக்கம் பரிதி அவர்களின் வித்துடல் விதைப்பிற்கும் இறுதி வீரவணக்க நிகழ்விற்கும் சுவிஸில் இருந்து பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ்கிழை அறிவித்துள்ளது.
http://eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-swisskilais%20(1).jpgசுவிஸ்சின் அனைத்து மாநிலங்களிலம் இருந்து பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: புஜாரா மீண்டும் சதம்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் காம்பீர் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனால்
எதிரிகளின் ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி
நீண்ட தூரம் சென்று இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை தயாரிப்பதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் இந்திய பாதுகாப்பு படையில் மேலும் ஒரு மைல் கல்லாக, எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து

தர்மபுரி அருகே கலவரம்: காதல் திருமணம் செய்த பெண் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்

தர்மபுரி அருகே உள்ள செல்லன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மகள் திவ்யா. இவரும் நத்தம் காலனியை சேர்ந்த இளங்கோ மகன் இளவரசனும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்

நெருக்கடிகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் வீரபாண்டி ஆறுமுகம் - திருமா​வளவன் இரங்கல்
திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆழ்ந்த இரங்கலைததெரிவித்துக்கொள்கிறது.   அவரது மறைவு திராவிட

அதிமுக அரசு அலைகழித்ததே வீரபாண்டி ஆறுமுகம் உடல்நிலை மோசமடைந்ததற்கு காரணம்: கலைஞர் பேட்டி
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 23.11.2012 வெள்ளிக்கிழமை காலை

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் காலமானார்
   திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.1957ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். 1970ல் பூலாவாரி ஊராட்சி தலைவராக பதவி வகித்தவர்


டத்தல், கொலை கொள்ளை பாலியல் பலாத்கார செயல்களில் தொடர்ந்தும் ஈடுபடாது ஈ.பி.டி.பி கடத்தி சென்ற லோகேஸ்வரனை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்பின் தீவக அமைப்பாளரும் யாழ். மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.நிலாந்தன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் முழு விபரத்தையும் இங்கே தருகிறோம்……
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரும் எனது தீவக முக்கிய செயற்பாட்டாளருமான சதாசிவம் யோகேஸ்வரன் (வயது 37) வேலணை வங்களாவடியில் அவரது வீட்டில்


வேலணையில் ஈ.பி.டி.பியினரால் கடத்தி செல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்

யாழ்ப்பாணம் வேலணை வங்களாவடியைச் சேர்ந்த 34வயதுடைய சதாசிவம் லோகேஸ்வரன் என்ற இளைஞர் நேற்று இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் தமிழ் பெண் வாகனத்தில் எரித்து கொலை- ஆணின் சடலமும் மீட்பு


கனடா மொன்றியலில் அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்ற 37வயதுடைய பெண் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. கடந்த மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
எரிந்த நிலையில் இவரின் சடலம் மீட்கப்பட்ட போது இன்னொரு ஆணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆணுக்கும்


Foto
G

மண்டைதீவுக் கிராமத்திற்கு புதிய வைத்தியசாலை விரைவில் அமைக்கப்படவுள்ளது.பிராந்தீய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இத் தகவலை தெரிவித்தார்.

நவீன வடிவமைப்புடனும் முழுமையான ஆளணிகளுடன் ரூ.22 மில்லியன் செலவில் இவ்வைத்தியசாலை அமையும் என அவா் மேலும் தெரிவித்தார்.

போர்கால சூழ்நிலைக்கு முன்பாக மண்டைதீவு அல்லைப்பிட்டி மக்களின் வைத்திய தேவையை முன்பு அமைந்திருந்த வைத்தியசாலையே பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனப்பிரச்சனையினை தீர்க்க பன்னாடுகள் முன்வரவேண்டும்-யாழ் ஆயர்கோரிக்கை!

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை செக் குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறுதி வரை பால் தாக்கரேவின் நிழல் போல் இருந்த ஆறு பேரும் ஈழத் தமிழர்கள் !“மராட்டியம் மராட்டியருக்கே… வேற்று மொழியினருக்கு இங்கே இடம் இல்லை” என்றார் ஒருசமயம். இன்னொருசமயம், ”தமிழர்களை மிகவும் நேசிக்கிறேன். ஈழத் தமிழர்கள், இந்தியாவின் குழந்தைகள்…” என்றார்.


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ரூ.25 கோடி நட்டஈடு வழங்குமாறு 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு கல்கிஸை நீதவான் நிதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. பாதுகாப்பு செயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்ட

கனடா மொன்றியலில் அனலைதீவு பெண் மற்றுமொரு ஆணுடன் வைத்து வாகனத்துடன் எரித்து கொலை 
கனடா மொன்றியலில் அனலைதீவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டது தற்கொலை அல்ல என கனேடியப் பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடைய அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன்

பிரிட்டனில் கடும் வெள்ள அபாயம்: கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 


பிரித்தானியாவின் புறநகர்ப் பகுதிகள், மிட்லன்ஸ் மற்றும் வேல்ஸ் போன்ற பகுதிகளை கடும் மழை தாக்க இருக்கிறது. இன்னு முதல் இன்னும் 2 வாரங்களுக்கு மழை நீடிக்கும் என வாநிலை அவதானிப்பு நிலையம் அறிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவின்

ஜனாதிபதி ராஜபக்‌ஷவை நெருங்கும் ஐந்து பெண்கள்! ஜோதிடத்தை நம்பி யோசனையில் மஹிந்த
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஜோதிடப்படி ஒரு பெண்ணால் அவரின் ஆட்சிக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என தெரியவந்ததால் யாரால் என் ஆட்சிக்கு அழிவு வரும் என யோசனையில் உள்ள மஹிந்த ராஜபக்‌ஷ ஐந்து பெண்களை நினைத்து யோசனையில் மூழ்கிப் போவார்

நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஒரு சாபக்கேடாக இருப்பவர் அஸ்வர்;சாடுகிறார் சரவணபவன் எம்.பி
 நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஒரு சாபக்கேடாக இருப்பவர் ஆளும் கட்சி உறுப்பினரான அஸ்வர். அவர் எங்களுக்கு தொல்லை கொடுப்பதற்காகவே இந்த சபைக்கு வருகின்றார் என சாடிய யாழ் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சரவணபவன்,தைரியம் இருந்தால் அஸ்வரும் ஒரு பத்திரிகை ஆரம்பிக் கட்டும்
கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிகுமாறு இலங்கை அரசுக்கு வலியுறுத்து
இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களை மீண்டும் விரைவில் தொடங்குமாறு மேற்கு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் நெருக்கடிகள் தொடர்பான சர்வதேசக் குழு தனது நீண்ட அறிக்கை ஒன்றில் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உள்ளது.

மது கிண்ணம் உடைந்து குத்தியதில் மணமகன் சாவு: திருமண நாளிலேயே இந்த சோகம்
லண்டனை சேர்ந்த பேபியோ ஜெபர்சன் (வயது 33) என்பவருக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் விருந்து நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது மணமகன் பேபியோ ஜெபர்சன் விருந்தினர்களுக்கு தானே மது சப்ளை செய்தார். மது கிண்ணம்

ஆபாச நடிகை கொடூர கொலை!
உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை!

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் நாடு, கால்பந்து போட்டிகளுக்கு மிகவும் புகழ்பெற்றது. இங்கு உலகப் புகழ்பெற்ற பல வீரர்கள் உருவெடுத்துள்ளனர். அவர்களில் புருனோ பெர்னான்டஸ் என்பவரும் ஒருவர். இவர் அந்நாட்டில் புகழ்பெற்ற


மத்திய அரசை காப்பாற்றவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்துள்ளனர்: மம்தா தாக்கு
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முயற்சித்தது. 

தற்கொலைக்கு முன் வீடியோ வாக்குமூலம்! தலைமறைவான அதிமுக கவுன்சிலரை தேடுகிறது போலீஸ்
திருச்சியைச் சேர்ந்த மினரல் வாட்டர் தொழில் அதிபர் சரவணன் 20.11.2012 அன்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் அவர், தற்கொலைக்கான காரணத்தையும், தற்கொலைக்கு காரணமானவர்களையும்
கழக அணியின் உரிமையாளராக இருப்பதே எனது விருப்பம் : டேவிட் பெக்கம
லொஸ் ஏஞ்சல்ஸ் கலக்ஸி" கழகத்திலிருந்து விலகி ஏதாவது ஒரு கழக அணியின் உரிமையாளராக இருப்பதே எனது விருப்பமென இங்கிலாந்து அணியின் கால்பந்தாட்ட ஜாம்பவான் டேவிட் பெக்கம் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : கிளார்க் இரட்டைச்சதம்
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அணித் தலைவர் மைக்கல் கிளார்கின் இரட்டைச்சதம் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 482 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் : ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்
விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் எங்கும் திரையிடக் கூடாது. மீறி திரையிட்டால் குறிப்பிட்ட திரையரங்குகளை முற்றுகையிட்டு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுப்போமென ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் : கரலியத்த
பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது அதற்கு அதிகமான தூக்குத் தண்டனை விதித்து அது நிறைவேற்றப்படும் என மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இன்று சபையில் தெரிவித்தார்
இலங்கை வங்கியின் தலைவர் இராஜினாமா செய்துள்ளார்
இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். தனக்கு வங்கியின் தலைவர் பதவியிலிருந்து விலக அனுமதி வழங்குமாறு நிதியமைச்சிடம் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக
பெண்கள் இராணுவத்திற்கு எந்தடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்?: சிறிதரன் எம்.பிவடக்கில் பெண்கள் இராணுவத்திற்கு எந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். அதற்காக இந்த பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதா என கேள்வியெழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எஸ். சிறிதரன், எவ்விதமான வர்த்தமானி அறிவித்தலும் இல்லாமல்
ஆஸி. செல்ல முயற்சித்த 17 இலங்கையர்கள் இந்தோநேசியாவில் கைது
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 17 இலங்கையர் இந்தோநேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுமத்தராவின் தென்மேற்கு பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்தோநேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
சர்மிளாவின் பாலர் பாடசாலைக்கு தீ வைக்க முயற்சி
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்கிற யோசனை தொடர்பில் தமது கருத்தை தெரிவித்த ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் சமூக ஆய்வாளர் ஷர்மிளா சயீத்தின் நிர்வாகத்திற்குரிய பகல் நேர பாலர் பராமரிப்பு நிலையத்திற்கு வியாழக்கிழமை அதிகாலை தீ வைக்க முயற்சிகள்

ad

ad