புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2015

28 அமைச்சர்களுடன் ஜெ. நாளை பதவியேற்பு; அமைச்சர்கள் இலாகா விவரம்!




சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை பெற்றதை தொடர்ந்து, ஜெயலலிதா நாளை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
அவருடன் புதிய தமிழக அமைச்சரவையும் பதவி ஏற்கிறது. புதிய அமைச்சரவையில் ஜெயலலிதாவுடன் சேர்த்து மொத்தம் 29  அமைச்சர்கள்  இடபெறுகிறார்கள்.
ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் பெயர் பட்டியல்:வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை பட்டியல்..

1. ஜெயலலிதா (முதல்வர்) - இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, பொது நிர்வாகத்துறை
2. ஓ.பன்னீர்செல்வம் - நிதி, பொதுப்பணித்துறை
3. நத்தம் விஸ்வநாதன் - மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை
4. வைத்திலிங்கம் - வேளாண், நகர்ப்புற மேம்பாடு, ஊரக வீட்டு வசதித் துறை
5. எடப்பாடி பழனிச்சாமி - நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகம், வனம்
6. மோகன் - தொழிலாளர் நலன், ஊரகத் தொழில் துறை
7. வளர்மதி - சமூக நலத்துறை, சத்துணவுத்துறை
8. பழனியப்பன் - உயர்கல்வித்துறை,
9. செல்லூர் கே.ராஜு - கூட்டுறவுத்துறை
10. ஆர்.காமராஜ் - உணவு, இந்து சமய அறநிலையத்துறை
11. தங்கமணி - தொழில் துறை
12. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத் துறை
13. எம்.சி.சம்பத் - வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை
14. டி.கே.எம்.சின்னையா - கால்நடை பராமரிப்புத் துறை
15. கோகுல இந்திரா - கைத்தறி மற்றும் தணிநூல் துறை
16. எஸ்.பி.வேலுமணி - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டத்துறை
17. சுந்தரராஜ் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை
18. எஸ்.பி.சண்முகநாதன் - சுற்றுலாத்துறை
19. என்.சுப்பிரமணியன் - ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
20. ஜெயபால்-மீன்வளத்துறை
21. முக்கூர் என்.சுப்பிரமணியன் - தகவல் தொல்நுட்பத் துறை
22. ஆர்.பி.உதயகுமார் - வருவாய்த் துறை
23. ராஜேந்திரபாலாஜி - செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கத் துறை
24. பி.வி.ரமணா- பால்வளத் துறை
25. கே.சி.வீரமணி - பள்ளிக் கல்வித்துறை,
26. தோப்பு வெங்கடாசலம்- சுற்றுச்சூழல் துறை
27. பூனாட்சி - காதி, கிராமத்தொழில் துறை
28. அப்துல் ரஹீம் - பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை
29. விஜயபாஸ்கர் - மக்கள் நல்வாழ்வுத்துறை
முதலமைச்சராக ஜெ. தேர்வு
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா மற்றும் 3 பேரை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி விடுவித்தது. இதையடுத்து, முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்பதற்கு ஏற்பட்டிருந்த தடை நீங்கியது.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (22 ஆம் தேதி) காலை 7 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஜெயலலிதா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
 பன்னீர் செல்வம் ராஜினமா
இதனையடுத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய 5 அ.தி.மு.க. அமைச்சர்கள் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி ஜெயலலிதாவிடம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்தார்.
பன்னீர் செல்வம் ராஜினாமா
அதன் பின்னர் இன்று காலை 8 மணியளவில் கிண்டி ராஜ் பவனில் கவர்னர் ரோசய்யாவை சந்தித்தார். அப்போது, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் அளித்தார்.

ஜெயலலிதாவுக்கு கவர்னர் அழைப்பு...

அதனைத்தொடர்ந்து பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்ற கவர்னர், தமிழக அமைச்சரவையை விரைவில் அமைக்கும்படி ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார்.அதன்படி இன்று பிற்பகல் கவர்னரை சந்தித்த ஜெயலலிதா, , தனது தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் பட்டியலை வழங்கினார்.
நாளை பதவியேற்பு
இதனையடுத்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை நடைபெறும் விழாவில், தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருடன் மற்ற 28 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

ad

ad