புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2015

நண்பர் வீட்டில் தஞ்சமடைந்த கருணாநிதியின் மூத்த மகன் முத்து!

ருணாநிதியின்  மூத்த மகன் மு.க. முத்துவை இளைய முறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவுக்கு பிறந்தவர்தான் இந்த மு.க. முத்து. அழகிரிக்கு மூத்தவர். 
 
1948ஆம் ஆண்டு பிறந்த மு.க. முத்து ,' பிள்ளையோ பிள்ளை', 'சமையல்காரன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சிவகாமிசுந்தரி என்பவரை இவர் திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்குப் பிறந்தவர்தான் அறிவுநிதி.


தற்போது 70 வயதை நெருங்கி விட்ட மு.க. முத்துவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

ஆனால் இவரை மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியோ அல்லது அவருடைய  குடும்பத்தினரோ பார்க்கவில்லை என்றும் தெரிகிறது. இதனால் ஆதரவற்ற நிலையில், மு.க.முத்து அடையாரில்  நண்பர் ஒருவரின் வீட்டில் மனைவியுடன் தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு, தங்களிடம் உள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் தங்கள் மகன் அறிவுநிதி, தங்களைத் துன்புறுத்தி வருவதாக மு.க.முத்துவும் அவரது மனைவியும் போலீசில் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் ஒருமுறை  , உடல் நலக் குறைவு காரணமாக மு.க. முத்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டபோது, தி.மு.க தலைவர் கருணாநிதி, தயாளு அம்மாள் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று  நலம் விசாரித்தனர். 

ad

ad